Saturday, May 30, 2009

தோரணை


ஒரு மசாலா படம் அவ்வளவுதான். கதை பெருசா ஒன்னும் இல்லை. பேரரசு,தருண் கோபி வரிசையில் சபா ஐயப்பன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு சாபக்கேடு.விஷாலிடம் விஜய் சாயல் தெரிந்தாலும் ரசிக்க முடியவில்லை. விஷால் தனது பாணியை மாற்றாவிட்டால், தமிழ் சினிமாவில் தாக்குபிடிப்பது மிகப் பெரிய சவாலாக அமையும். கதாநாயகி ஷேரேயா கால்வாசி ஆடையுடன் அடிக்கடி வந்து விட்டு போகிறார். அது யாருப்பா Costume Designer...?

சாதாரண யதார்த்தமான ஆடைகளேஅவருக்கு தெரியாதா?


ஒருவரை பற்றி இங்கு சொல்லியே ஆகா வேண்டும். படத்தின் வசனகர்த்தா... யாரென்று தெரியவில்லை. டிஆர்,பேரரசு போன்றவர்கள் ஜாக்கிரதை. பறவை முனியம்மா முதல் பட்டாபி வரை அனைவரும் வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் வசனம் பேசுகிறார்கள். காதல் காட்சிகள் என்ற பெயரில் செம மொக்கையை போடுகிறார்கள். K.S.ரவிகுமார்,ஹரி போன்ற ரசிக்கவைக்கும் மசாலா இயக்குனர்கள் மத்தியில் சபா ஐயப்பன் போன்றவர்களும் இருப்பது ஒரு கரும்புள்ளியே.


எனது மதிப்பீடு :2/10

No comments: