Tuesday, July 27, 2010

இந்தியா...


நமது இந்தியா நிலநடுக்கோட்டிற்கு வடக்கில் ஆசியக்கண்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்ளது.
உலக நிலப்பரப்பில் 2.5 சதவிகிதம் கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 16 % பெற்றுள்ளது.
நம் நாடு உலகில் உள்ள எல்லா நாடுகளுடன் வணிகதொடர்பிர்க்கும்,கடல்போக்குவரதிர்க்கும் எளிமையாக உள்ளது.
நம் நாடு ப்விப்பரப்பின் அடிப்டையில் ஏழாவது இடத்தில உள்ளது.
இந்தியாவின் மோதப்ப்பரப்பு 3.3 கி.மீ ஆகும்.


உலகில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நமது இரும்பு பாதையின் மண்டலங்கள்...
1.மத்திய இரயில்வே மண்டலம் =மும்பை

2.கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

3.வடக்கு இரயில்வே மண்டலம் =புதுடெல்லி

4.தென்னக இரயில்வே மண்டலம் =சென்னை

5.வடகிழக்கு இரயில்வே மண்டலம்=கோரக்பூர்

6.தென்மத்திய இரயில்வே மண்டலம் =செகந்திராபாத்

7.வடகிழக்கு எல்லைப்பகுதி இரயில்வே மண்டலம் =மாளிகான்

8.தென்கிழக்கு இரயில்வே மண்டலம் =கொல்கத்தா

9.மேற்கு இரயில்வே மண்டலம் =மும்பாயில் உள்ள சர்க்கேட்


இந்தியாவின்
சிறப்புகள் :

*முதன் முதலில் என் முறையை கண்டு பிடித்தது. ஆரியப்பட்டாதான் பூஜியத்தை கண்டு பிடித்தார்.

*உலகின் மதல் பல்கலைக்கழகமான தக்க்ஷிமுகி கி.மு.700 ம் ஆண்டில் நிறுவப்பட்டது.10,500க்கும் அதிகமான் மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து 60க்கும் மேற்ப்பட்ட கலைகளை கற்றனர். நாலந்தா பல்கலைக்கழகம் கி.மு 4 ம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றது.சமஸ்கிருதம் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் மொழியாக விளங்கியது.

*17 ம் நூற்றாண்டில் வெள்ளைக்கார காலனியாதிக்கம் ஏற்ப்படும் வரை இந்தியா செல்வம் கொழிக்கும் நாடாகவே இருந்துள்ளது.

*சிந்து நதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்வழிப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.

*பாஸ்கராச்சார்யா பூமி சூரியனச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடித்தார்.5 ம் நூற்றாண்டிலேயே பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகும் என கண்டுபிடிக்கப்பட்டது.

*கணிதத்தில் "பையின்" மதிப்பை கண்டறிந்தவர் "புத்தயனார்" என்பவர் ஆவார்.மேலும் அல்ஜீப்ரா,ஜியோமேதி,கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

*அமெரிக்காவின் இயற்கைத் தாக்கங்கள் பற்றி ஆராயும் நிறுவணன் 1896 ஆம் ஆண்டு வரை இந்தியாதான் வைரத்திற்கு ஆதாரமாக விளங்கியுள்ளது என்று கூறியுள்ளது.(ஆனால் அவையெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை).மேலும் அந்நிறுவனம் கம்பியில்லாத போக்குவரத்தை மார்கொனிக்கு முன்னரே "ஜகதீச்போஸ்" தான் கண்டுபிடித்தார் என நிரூபித்துள்ளது.

*சதுரங்க விளையாட்டு இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றி மற்ற நாட்டவர் கூற்று :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்:"நாம் இந்தியாவுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்".எவ்வாறு எண்ணுவது என்பதை கண்டறிந்தவர்கள் அவர்கள்.அவ்வாறு கண்டுபிடிக்காவிட்டால் எந்தவித ஆய்வியல் கண்டுபிடிப்பும் இல்லாமல் போயிருக்கும்.

மார்க் தைவான்: இந்திய மனித இனத்தின் தொட்டில்,மனிதப் பேச்சின் பிறப்பிடம்,சரித்திரத்தின் தாயகம்,நினைவுச்சின்னங்களின் மூதாட்டி,பாரம்பரியத்துக்கு முன்னோடி,மேலும் மனித வரலாற்றின் விலைமதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பிரஞ்சு கல்வியாளர் ரொமைன்ரோலன்ட்: உலகில் ஓரிடத்தில் மனிதர்களின் கனவெல்லாம் நினைவானது என்றால் அது நிச்சயமாக இந்தியாவாகத்தான் இருந்திருக்கும்.

சில கசப்பான உண்மைகள் :

1. 2050-இல் மக்கள்தொகையில் உலகின் #1 நாடு - இந்தியா (161.38 கோடி, அப்போது சீனா வெறும் 141.7 கோடி)

2. உத்திரப்ரதேசத்தின் மக்கள் தொகை = பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் - 18.5 கோடி. (பிரேசில் இந்தியாவைவிட நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு)

3. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை = மேக்சிகோ நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் (10.4 கோடி)

4. பீகாரின் மக்கள் தொகை = ஜெர்மனி நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் (8.3 கோடி)

5. மனிதவள மேம்பாட்டில் இந்தியாவின் இடம் = 134

6. Indian's ranking in Global Hunger Index = 65

7. சுகாதாரம் - இந்தியாவின் இடம் = 114

8. Indian's rank on Gender equality = 113

9. மாசுக்கட்டுபாட்டில் இந்தியாவுக்கான இடம் = 123

10. ஊழல் - இந்தியாவின் இடம் = 8


இறுதியாக கண்ணுக்கு எதிரே நடை பெரும் இன படுகொலைகளை, இறையாண்மை என்ற பெயரில் தட்டி கேட்க வக்கில்லாத நாடு...

Saturday, July 24, 2010

ஒரு ஆற்றின் கதறல்...


இரு மருங்கிலும்
கெண்டைகள் விளையாட
துள்ளி குதித்து
சிரித்து கொண்டிருந்த காலம்
இப்போது என் கனவுகளில்

பிறந்ததில் இருந்தே
கொடுத்தே பழக்கப்பட்ட நான்
எடுத்தே பழக்கபட்ட மனிதர்கள்
சந்தோசமாக உதவினேன்
பயன்படுத்தப்பட்டேன்

மனிதர்களின் புத்தியில்
வழக்கமான கோணல்கள்
என் கரையோர மரங்கள் வெட்டபட்டன
என் தண்ணீர் மாசுபடுத்தபட்டது

என் ரத்தம் அசுத்தமானது.
என் சேமிக்கும் பெட்டகங்கள்
கொள்ளை போயின

மணல் லாரிகளிலும்
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றன
தண்ணீரல்ல...
என் கண்ணீர்

களைத்தும்
கலைந்தும் நான்
மெல்ல முனகியபடி...

என்னுள் எலும்புகள் தெரிகிறது
தயவு செய்து அதையும் டெண்டர்
விட்டு விடாதீர்கள்
என் பாறைகளாவது மிஞ்சட்டும்...

உங்கள் நாளைய தலைமுறைக்கு
ஓர் ஆற்றின் கதை (கதறல்) சொல்ல...!

Thursday, July 22, 2010

நேர்மைக்கு கிடைத்த வெற்றி...



குடும்பத் தகராறால் ரூ.300 கோடி விரயம்:

"குறைந்தவிலையில்,உயர்ந்த தரம் வாய்ந்த கேபிள் டிவி இணைப்பு கொடுப்பதற்கு" என்று மக்களின் காதில் பூசுற்றி துவங்கப்பட்ட நிறுவனம்தான் அரசு-கேபிள் டி.வி. உண்மையில், ஆளுங்கட்சித் தலைவரின் வாரிசுகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போட்டியின் விளைவுதான் அரசு-கேபிள் டி.வி. ஆகஸ்ட் 2007ல் துவங்கப்பட்ட அரசு-கேபிள் டி.வி, ஜுலை 2008ல் ஒளிபரப்பைத் துவங்கியது. மிகவிரைவாக அதிகாரபூர்வமில்லாத மூடுவிழாவைக் கண்டது. குடும்பத் தகராறு தீர்ந்துவிட்டது. அரசுகேபிள் டிவிக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. குடும்பத் தகராறால் அரசு கேபிள் டிவியில் விரயமாக்கப்பட்ட மக்கள்வரிப் பணம் ரூ.300கோடி !!

தனியாரின் கைக்குப்போன அரசின் சொத்து ரூ.700கோடி:
அரசுநிறுவனமான எல்காட்(ELCOT) தனியாருடன் இணைந்து உருவாக்கியதுதான் "எல்நெட் சாப்ட்வேர் கம்பெனி(தரமணி, டைடல் பார்க்கில் உள்ளது)". இந்த எல்நெட் நிறுவனம், ETL என்ற துணை நிறுவனம் ஒன்றை நிறுவுகிறது. எப்படி? கோடிக்கணக்கில் அரசுப் பணத்தை செலவழித்து நிலம்வாங்கி, அரசின் சொத்துகளை ரூ.81கோடிக்கு அடமானம் வைத்துத்தான். பழைய மகாபலிபுர சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.700கோடி. இந்த நிறுவனம் தற்போது முழுக்க முழுக்க தனியார் ஒருவரின் சொத்தாகிவிட்டது. இதனால் களவுபோன மக்கள்வரிப்பணம் ரூ.700கோடி !!

ஊழலை கண்டுபிடித்ததால் தண்டிக்கப்பட்ட அதிகாரி:

எல்காட்,அரசு கேபிள் டி.வி யில் மேலாண் இயக்குனராகப் பணியாற்றிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி , மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இந்த நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்,முறைகேடுகளைத் தட்டிக்கேட்டார். ஆதாரப்பூர்வமாக ஊழலை அம்பலப்படுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய அத்தனை இடங்களிலும் நேர்மையாக,மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர் இவர்.

ஊழலுக்கு உடன்படாத இவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா? தொடர்ச்சியான பணிமாற்றம்(Transfer), வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று பொய்யான விசாரணை, பதவி உயர்வுக்குத் தடை ! கடைசியாக இன்று பனி இடை நீக்கம்.

மடியில் கணமில் லாததால், அரசின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை இவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எல்காட்,அரசு கேபிள் டி.வியில் நடைபெற்ற ரூ.1000கோடி ஊழலை 150பக்க ஆவணத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் !!

அரசு,பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுத்த நேர்மையான நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றத்தின் படியேறி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் - திரு.உமாசங்கர்.ஐ.ஏ.எஸ்

தஞ்சை மாவட்ட ஆட்சியாளராக இருந்த பொழுது, அங்கு மின் ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியவர்.. பின் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது(99-01) திருவாரூரை இந்தியாவின் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாகியவர். இவர் தான் இன்று நேர்மைக்காக தண்டிக்கப்பட்ட அதிகாரி.

ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அதிகாரப் பணிகளில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால்,எந்த செல்வாக்கும் இல்லாத சாமானியனுக்கு எப்படி கிடைக்கும் நீதி !!? நேர்மையான ஒருசில அதிகாரிகளும் இப்படி தண்டிக்கப்படும்போது, மற்றவர்கள் ஊழல்,முறைகேடுகளை எதிர்த்து நிற்க எப்படி முன்வருவார்கள்....?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுதே காதினிலே...

Monday, July 19, 2010

இந்தியாவும், அதன் வளமும்...

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!

உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!

இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.
இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.

காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.

5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.


6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.

இந்தியா ஆரம்பிக்குமா...?

Wednesday, July 14, 2010

வீட்டு மனைகளாகும் விளை நிலங்கள்


இன்றைய தினமணியில் வந்த ஒரு செய்தி...

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வந்து சேராததால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை வீட்டுமனைகளுக்காக விற்று வருகின்றனர்.

இம் மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்கு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தெங்கம்புதூர், கோட்டார், ராஜாக்கமங்கலம், முட்டம் கால்வாய் பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர வந்து சேரவில்லை.

முக்கிய கால்வாய்களை கோடையில் முறையாகத் தூர்வாரி செப்பனிடாமல்விட்டதாலும், தனியார் ஆக்கிரமிப்புகளாலும் கால்வாய்கள் சுருங்கி தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனந்தனார் கால்வாயின் கிளைக் கால்வாயான தெங்கம்புதூர் கால்வாய் வழியாக கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த குளம் ஒரு ஏக்கர் 4 சென்ட் பரப்பளவு கொண்டது. இதையொட்டிய பாசன பரப்பளவு 15 ஏக்கர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் இங்கு பாசனப் பரப்பு குறைந்தது.

கடந்த கும்பப்பூ பருவத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இங்கு நெற்பயிர் பாசனம் நடைபெற்றது. குளத்தின் மடை மற்றும் குளம் ஆழப்படுத்தும் பணி 2002-2003-ம் நிதியாண்டில் கண்துடைப்பாகவே செய்யப்பட்டது. குளத்தின் மடையில் தற்போதும் உடைப்பு உள்ளது. இதை உடனுக்குடன் சீரமைக்கவில்லை என்பதாலும், குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை புனரமைக்காததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

பாசனப்பரப்பு குறைந்து பல ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளதால், தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் இவற்றை விலைபேசி பிளாட் போட்டுள்ளனர்.
இங்குள்ள கால்வாயை ஓட்டியுள்ள நில உரிமையாளர்கள் வீட்டுமனைகளுக்கு நிலத்தை விற்க மண்ணைக் கொட்டி மேடாக்கியுள்ளதால் கால்வாய் குறுகி குளத்துக்கு தண்ணீர் வரவில்லை.

மேலும், கால்வாய் கரையோரம் வசிப்போர் குப்பைகள் மற்றும் கழிவுகளை கால்வாயில் கொட்டுவதாலும் கால்வாய் பாழடைந்துள்ளது. இதனால் பறக்கை கால்வாய், மணக்குடியான் கால்வாய் போன்ற நிலைக்கு இக் கால்வாயும் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னிமூலக்குண்டு ஓடைக்குளத்துக்கு தண்ணீர் வரும் என நினைத்து அப்பகுதி விவசாயிகள் நடப்பு கன்னிப்பூ பருவத்துக்கு நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். சில விவசாயிகள் நாற்று பாவியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் வந்து சேராததால், நெற்பயிர் கருகும் அபாயம் உருவாகியுள்ளது.
தெங்கம்புதூர், புத்தளம் பகுதிகளில் 700 ஏக்கருக்குமேல் நெல் விவசாயம் இருந்தது.

தண்ணீர் இல்லாத காரணத்தால் அவற்றில் 500 ஏக்கருக்குமேல் தரிசாகிவிட்டன. விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் வீட்டுமனை நிலங்களுக்காக விற்று வருகின்றனர் என்று வேதனை தெரிவிக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு செயலர் சி. பொன்னுலிங்க ஐயன்.
இந்த பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநருக்கு தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ராஜாக்கமங்கலம், முட்டம் பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இப் பகுதிகளில் கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை என்பதால் 100 ஏக்கர் அளவுக்கு நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

சாந்தபுரம் கால்வாயை தூர்வாரி செப்பனிடவில்லை. அழகன்விளை, முஞ்சிரவிளை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயத்துக்குக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

இவ்வாறு கடைவரம்பு பகுதி பாசனத்துக்கு தண்ணீர் வராததால் நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்துக்கு பலர் மாறி வருகிறார்கள். நெற்பயிர் விவசாயப் பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது என்று மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கப் பொருளாளர் டி. தேவதாஸ் தெரிவித்தார்.

நெல் விவசாயத்தை உயிர்ப்பிக்க ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

கடைமடை பகுதிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதால், தெங்கம்புதூர் பகுதியில் கருகும் அபாயத்தில் உள்ள நெற்பயிர்.

விவசாய விளைநிலங்கள் வீட்டு மனைகலாகும் அவல நிலை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நகரமயமாக்கல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவு இது.

சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது சாலையின் இரு மருங்குகளிலும் ஏராளமான புதிய புதிய நகர்களின் பெயர்ப் பலகைகள். பல மனைப் பிரிவுகள். சின்னஞ்சிறு கிராமத்தில் கூட புதிதாக ஏதோ ஒரு நகருக்கான பெயர் பலகை. சமீப சில மாதங்களில் நடந்து முடிந்துள்ள நிகழ்வு இது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த புதிய வீட்டுமனைப் பிரிவுகள் இருந்த இடம் சில மாதங்களுக்கு முன்பு வரை பச்சை பசேல் என நெல் வயல்களாக இருந்தது தான். நஞ்சை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது என்று அரசு விதி இருப்பதாக தெரிகிறது. இருந்தும் எப்படி, எதற்காக, இவ்வாறு மாற்றினார்கள் என்பதே புரியவில்லை.

விவசாயம் ஒரு இலாபகரமான தொழிலாக இல்லாமல் போனது தான் இதற்கான காரணம் என்று நினைக்கிறேன். வந்த விலைக்கு நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கி மக்கள் வேலை தேடி கிளம்பி விடுகின்றனர்.

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் அண்ணல் காந்தி. இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் கிராமங்களே இருக்கப் போவதில்லை.

இதயம்...???