Saturday, July 24, 2010

ஒரு ஆற்றின் கதறல்...


இரு மருங்கிலும்
கெண்டைகள் விளையாட
துள்ளி குதித்து
சிரித்து கொண்டிருந்த காலம்
இப்போது என் கனவுகளில்

பிறந்ததில் இருந்தே
கொடுத்தே பழக்கப்பட்ட நான்
எடுத்தே பழக்கபட்ட மனிதர்கள்
சந்தோசமாக உதவினேன்
பயன்படுத்தப்பட்டேன்

மனிதர்களின் புத்தியில்
வழக்கமான கோணல்கள்
என் கரையோர மரங்கள் வெட்டபட்டன
என் தண்ணீர் மாசுபடுத்தபட்டது

என் ரத்தம் அசுத்தமானது.
என் சேமிக்கும் பெட்டகங்கள்
கொள்ளை போயின

மணல் லாரிகளிலும்
மணல் வண்டிகளிலும்
சொட்டியபடி சென்றன
தண்ணீரல்ல...
என் கண்ணீர்

களைத்தும்
கலைந்தும் நான்
மெல்ல முனகியபடி...

என்னுள் எலும்புகள் தெரிகிறது
தயவு செய்து அதையும் டெண்டர்
விட்டு விடாதீர்கள்
என் பாறைகளாவது மிஞ்சட்டும்...

உங்கள் நாளைய தலைமுறைக்கு
ஓர் ஆற்றின் கதை (கதறல்) சொல்ல...!

No comments: