Wednesday, February 25, 2009

ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007




மனைவியின் டயரி

இன்றிரவு அவர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டதாக எனக்குப் படுகிறது. ஒரு உணவு விடுதியில் நாங்கள் சந்தித்து தேநீர் அருந்துவதாக ஏற்பாடு.

இன்று முழுதும் எனது தோழிகளுடன் கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் நான் சிறிது தாமதமாக வந்தது, அவருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. நான் சிறிது நேரம் வெளியில் போய் வந்தால் பேசி அமைதிப் படுத்தி விடலாமென்று வெளியில் போக அழைத்தேன். ஒப்புக்கொண்டார் ஆனால் எதுவம் பேசாமல் ஏதோ சிந்தனையில் இருப்பது போல்தான் இருந்தார்.

'ஏன்? என்ன ஆனது?' என்றும் கேட்டுப் பார்த்தேன். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார்.

'இவ்வளவு வருத்தமாக இருப்பதற்கு நான்தான் காரணமா?' என்றும் கேட்டுப் பார்த்து விட்டேன். 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒன்றும் கவலைப்படாதே' என்று சொல்லி விட்டார்.

திரும்ப வரும் போது 'ஐ லவ் யூ' என்று சொன்னேன். அவர் சும்மா புன்னகைத்து விட்டு வண்டி ஓட்டுவதிலேயே கவனமாயிருந்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை எப்படி சொல்வதென்றே விளங்கவில்லை. அவர் 'ஐ லவ் யூ டூ' என்று ஏன் சொல்லாமல் இருந்தார்?

நாங்கள் வீட்டுக்குத் திரும்பிய போது, அவருக்கு என்னிடம் எந்தத் தேவையும் இல்லாதது போலவும், அவர் என்னை விட்டு நீங்கி விட்டதாகவும் உணர்ந்தேன். அவர் சும்மா அமர்ந்து, எதிலும் மனது இலயிக்காதவராக, ஏதா யோசித்தவராக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக நான் படுக்கைக்குப் போனேன். பத்து நிமிடம் கழிந்த பின் அவரும் படுக்கைக்கு வந்தார். எனக்கு ஒன்றும் நிலை கொள்ளவில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நான் அழுதழுது கன்னம் வீங்கி எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் என்னை விட்டு விட்டு வேறு யாரையோ மனதில் கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுக்கிறது.

கணவனது டயரி

இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஸிடம் தோற்றது. இந்திய கிரிக்கெட்டுக்கே பெருத்த அவமானம்.


(நன்றி:ரவிஷர்மி)

இந்திய தலைநகரமும் போக்குவரத்து மீறல்களும்

--- ஒரு சிறிய கண்ணோட்டம்

புது தில்லியில் பதிவாகி இருக்கும் வழக்குகள் மட்டும் :
*6.99 கோடி வருமானம் 2009 ல் மட்டும் (ஜன '09 - பிப் 15 '09, 45 நாட்கள் மட்டும் )
*குடித்துவிட்டு ஓட்டுவது, வேகமாக செல்வது என போக்குவரத்து மீறல் பற்றிய வழக்குகள் மட்டும் 6 லட்சம் 2009 ல் (முதல் 45 நாட்களுக்கு மட்டும்)

2008 ல்
*86.52 கோடி வருமானம்
*7400 ஓட்டுனர்கள் மீது வழக்கு
*98000 இருசக்கர ஓட்டுனர்கள் மீது வழக்கு

மேற்கூறிய புள்ளி விவரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் உள்ளவையே ...
ரசீது இல்லாமல்....
அவை கணக்கே இல்லை ....

தில்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் (முக்கியமாக பெங்களூரையும் சேர்த்து ) எத்தனை வழக்குகள், எவ்வளவு வருமானம் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
பின் வரும் சந்தேகம் உங்களுக்கே வரும்

இந்தியா ஒரு ஏழை நாடு ............?
(கரு : போக்குவரத்து காவல் துறை )

IPL அட்டவணை





IPL 2009 schedule:

Apr 10: Rajasthan Royals vs Delhi Daredevils at Jaipur.

Apr 11: Kolkata Knight Riders vs Deccan Chargers at Kolkata;
Chennai Super Kings vs Royal Challengers at Chennai.

Apr 12: Delhi Daredevils vs Kings XI Punjab at Delhi ;
Mumbai Indians Vs Rajasthan Royals at Mumbai.

Apr 13: Deccan Chargers vs Chennai Super Kings at Hyderabad.
Apr 14: Royal Challengers vs Kolkata Knight Riders at Bangalore.

Apr 15: Kings XI Punjab vs Mumbai Indians at Mohali.

Apr 16: Deccan Chargers vs Delhi Daredevils at Hyderabad;
Chennai Super Kings vs Rajasthan Royals at Chennai.

Apr 17: Mumbai Indians vs Royal Challengers at Mumbai.

Apr 18: Kings XI Punjab vs Deccan Chargers at Mohali;
Kolkata Knight Riders vs Delhi Darevils at Kolkata.

Apr 19: Mumbai Indians vs Chennai Super Kings at Mumbai;
Royal Challengers vs Rajasthan Royals at Bangalore.

Apr 20: Kolkata Knight Riders vs Kings XI Punjab at Kolkata.

Apr 21: Delhi Daredevils vs Mumbai Indians at Delhi.

Apr 22: Rajasthan Royals vs Deccan Chargers at Jaipur.

Apr 23: Royal Challengers vs Kings XI Punjab at Bangalore.

Apr 24: Mumbai Indians vs Kolkata Knight Riders at Mumbai.

Apr 25: Delhi Daredevils vs Royals Challeners at Delhi;
Chennai Super Kings vs Kings XI Punjab at Chennai.

Apr 26: Rajasthan Royals vs Kolkata Knight Riders at Jaipur;
Deccan Chargers vs Mumbai Indians at Vizag.

Apr 27: Kings XI Punjab vs Royal Challengers at Mohali.

Apr 28: Mumbai Indians vs Delhi Daredevils at Mumbai.

Apr 29: Kings XI Punjab vs Rajasthan Royals at Mohgali.

Apr 30: Deccan Chargers vs Royal Challengers at Vizag.



May 1: Chennai Super Kings vs Delhi Daredevils at Chennai.
May 2:
Mumbai Indians vs Deccan Chargers at Mumbai;
Kolkata Knight Riders vs Rajhasthan Royals at Kolkata.

May 3: Kings XI Punjab vs Chennai Super Kings at Mohali;
Royal Challengers vs Delhi Daredevils at Bangalore.

May 4:
Deccan Chargers vs Rajsathan Royals at Hyderabad.

May 5:
Delhi Daredevils vs Chennai Super Kings at Delhi.
May 6:
Rajasthan Royals vs Kings XI Punjab at Jaipur;
Kolkata Knight Riders vs Mumbai Indians at Kolkata.

May 7:
Royal Challengers vs Deccan Chargers at Bangalore.

May 8: Kolkata Knight Riders vs Chennai Super Kings at Kolkata.

May 9:
Rajasthan Royals vs Mumbai Indians at Jaipur;
Kings XI Punjab vs Delhi Daredevils at Mohali.

May 10:
Deccan Chargers vs Kolkata Knight Riders at Hyderabad.

May 11:
Delhi Daredevils vs Rajsathan Royals at Delhi.

May 12:
Mumbai Indians vs Kings XI Punjab at Mumbai;
Chennai Super Kings vs Deccan Chargers at Chennai.

May 13:
Kolkata Knight Riders vs Royal Challengers at Kolkata.

May 14: Rajasthan Royals vs Chennai Super Kings at Jaipur;
Delhi Daredevils vs Deccan Chargers at Delhi.

May 15:
Royal Challengers vs Mumbai Indians at Bangalore.

May 16:
Delhi Daredevils vs Kolkata Knight Riders at Delhi;
Deccan Chargers vs Kings XI Punjab at Hyderabad.

May 17:
Rajasthan Royals vs Royal Challengers at Jaipur;
Chennai Super Kings vs Mumbai Indians at Chennai.

May 18:
Kings XI Punjab vs Kolkata Knight Riders at Mohali.

May 19: Royal Challengers vs Chennai Super Kings at Bangalore.

May 21: First semi-final at Chennai

May 22: Second semi-final at Chennai.
May 24: Final at Mumbai.

Tuesday, February 24, 2009

மரம் அது கடவுளின் கரம்...



மரம் ஒரு வரம்


மரத்தினால் பயனென்ன ?


* மலர்கள், காய், கனிகள் தருகிறது
*நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது?
*காற்றை சுத்தப்படுத்துகிறது
*நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
*கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
*மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
*மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
*காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
*ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.



*ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
*ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
*ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
*ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
*ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


Saturday, February 21, 2009

வலிப்பது மனம் மட்டுமல்ல உயிரும் தான்...

தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கூறினான்.
ஆனால் இன்றோ...
அடபோங்கடா....
நீங்களும் உங்க பணமும்
(புகைப்பட கரு : விகடன் )

முத்தமிழ் காவலரே போதும் உங்கள் ஆட்சி...

கண்டதும் சுட உத்தரவு
இது பாகிஸ்தானிலோ, இலங்கையிலோ அல்ல ஜெனநாயக இந்திய திருநாட்டில், அதுவும் நம் தமிழகத்தில்.
சரி விடுங்கள் யாரை கண்டால் ?
நாடு காக்கும் காவல் துறையும் , சட்டம் காக்கும் சட்ட துறையும்

காவல் துறை அமைச்சர் :
முதல்வர் கருணாநிதி
சட்ட துறை அமைச்சர் :
திரு துரைமுருகன்

என்ன தான் நடக்கிறது தமிழகத்தில் ......?

சென்னைஅம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக் கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி சட்டக் கல்லூரி வளாகத்திலேயே மூண்ட மோதலில், கத்தியோடு பாய்ந்த ஒருமாணவரை இன்னொரு கோஷ்டி மாண வர்கள் சூழ்ந்துகொண்டு இரும்புத் தடிகள் மற்றும் கம்புகளால் அடித்துத் துவைத்தனர்। அந்த ரத்தக் களறியை அப்போது பக்கத்தில் இருந்தே கை கட்டி வேடிக்கை பார்த்தது போலீஸ்।
இந்தக் கொடூரம் நடந்து சரியாக 100-வது நாளில் அருகிலேயே உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் கலவரம்; கல்வீச்சு; தடியடி; தீவைப்பு! இம்முறை மோதல் மாணவர்களுக்கிடையே இல்லை; போலீசுக்கும் வக்கீல்களுக்கும் இடையில்தான்!
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆட்சியாளர்களே இப்படி இருந்தால், மக்களின் பாதுகாப்பு கேள்விகுறி தான்.

உருப்படியாக என்ன தான் செய்திருக்கிறார் கலைஞர்?
வெளிப்படையாக சொன்னால் ஒரு எழவும் இல்லை

மின்வெட்டு (இன்று வரை இருக்கும் தலையாய பிரச்சனை),
சட்டம் ஒழுங்கு (சட்டகல்லூரி கலவரம், திருமங்கலம் இடைதேர்தல் கலவரம், இன்று உயர் நீதி மன்ற கலவரம்) ,இலவசம், ஒக்கேனகல் திட்டத்தில் தோல்வி, பெங்களூரில் வள்ளுவன் சிலை திறப்பு, இலங்கை விவகாரம் என நிர்வாகத்தில் ஏக பட்ட குளறுபடிகள்।
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி,கிலோ அரிசி 1 ரூபாய்,இலவச நிலம், வெள்ள நிவாரணம் என முட்டாள் தனமான முடிவுகள் பல।(பின்ன அரசு மதுகடைகளால் வரும் வருமானத்தை எப்படி செலவு செய்வதாம்। அரசு மதுகடைகள் உண்டு ஆனால் கள் இறக்க அனுமதி இல்லை। அடபோங்கப்பா...)

1969 முதல் தி.மு.கவும், அண்ணா.தி.மு.கவும் மாறி மாறி சுமார் 39 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது.
ஆனால் இன்றுவரை காவேரி தமிழ்நாட்டிற்கு வந்தபாடில்லை,
இலங்கை தமிழன் இன்று வரை செத்துக்கொண்டு தான் இருக்கிறான்.

ஆகவே தயவு செய்து விட்டு விடுங்கள் தமிழகத்தை.
80 வயது கலைஞர் ஆகட்டும், 60 வயது அம்மா வாகட்டும்,

கடைசி காலத்தில் ஏதாவது நல்லது செய்ய தோன்றினால்,
அரசியல் விட்டு நீங்கள் விலகுவது தான் மிக பெரிய நல்ல காரியமாக அமையும்.
அன்று தான் தமிழகத்துக்கு உண்மையான சித்திரை திருநாள், தைத்திருநாள், தீபாவளி எல்லாம்.




Thursday, February 19, 2009

தமிழக பட்ஜெட் ('08-'09ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை)

தெரிஞ்சு தான் வச்சுக்குங்களேன்....

(எனது கண்டனம் சிவப்பு நிறத்தில்)

* பட்ஜெட் மொத்த வருவாய் 58 ஆயிரம் 270 கோடி ரூபாய்.
* நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்
* சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க ரூ. 1,448 கோடி மதிப்பீட்டிலான பெருந்திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* காவல் துறைக்கு ரூ.2855 கோடி ஒதுக்கீடு.
* இல‌‌ங்கை அக‌திக‌ள் மறுவா‌ழ்‌வு‌க்கு ரூ.5 கோடி ஒது‌க்‌கீடு
* புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* வழக்குகளை விரைவாக முடிக்க 56 மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்படும்.
* சுய ‌நி‌தி குழு‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 20 ஆ‌யிர‌மாக அ‌திக‌ரி‌ப்பு.
* தேங்காய்பட்டினத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
* ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் மலிவு விலை மளிகைப் பொருட்கள் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* இலவச கலர் டி.வி.க்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு
வேளாண்மை
* கூ‌ட்டுறவு‌க் கடனை உ‌ரிய கால‌த்‌தி‌ல் செலு‌த்‌தினா‌ல் இ‌னி வ‌ட்டி ‌கி‌டையாது.
* விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் விநியோகிக்கப்படும்.
* ப‌யி‌ர் கா‌ப்‌பீடு ‌தி‌ட்ட‌த்து‌க்கு ரூ. 200 கோடி ஒது‌க்‌கீடு.
* வெள்ள பகுதிகளில் நிலவரி ரத்து
* 5500 கால்நடை முகாம்கள் அமைக்கப்படும்
* சுய உதவி குழுக்களுக்கு 5000 உயர்கலப்பின பசுமாடு.
* மதுரையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புத் திட்டம் அமல்.
* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1200 வழங்க முடிவு
* மதுரையில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புத் திட்டம் அமல்.
* பயிர்க்கடனுக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு
* விவசாய தொழிலாளர் குடும்ப உதவிக்கு ரூ. 152 கோடி ஒதுக்கீடு
* நீர் வள திட்டத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு
* நெல்லை நதிகள் இணைப்புக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
* விவசாய வளர்ச்சிக்கு ரூ.5,236 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு
* ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு
கிராம வளர்ச்சி
* தமிழகத்தில் மேலும் 20 கிராமங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 1750 கோடி
* கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராம வளர்ச்சிக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ. 509 கோடி ஒதுக்கீடு.
கல்வி
* அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து.
* அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து.
* பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 112 கோடி ஒதுக்கீடு.
* மேனிலை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.200 கோடி.
* 2,500 நடுநிலைப் பள்ளிகளில் கணினி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* பின் தங்கிய மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.
* திருவண்ணாமலை, திண்டுக்கல், கன்னியா குமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பொறியியல் கல்லூரிகள்.
* ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ. 58 கோடியில் இலவச சீருடை
6வது ஊதியக்குழு பரிந்துரை விரைவில் அமல்
* மத்திய 6வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்கள் விரைவில் அமல் செய்யப்படும்.
* ஓய்வூதியதாரர்களின் மனைவி அல்லது கணவரின் மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
* அரசு அலுவலர் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ. 66 கோடி ஒதுக்கீடு
மருத்துவம்:
* சென்ட்ரலில் இருந்து மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரூ.70 கோடி செலவில் அரசு பொது மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும்.
* சென்ட்ரல் மத்திய சிறைச்சாலை இருந்த எஞ்சிய இடத்தில் மிகப் பெரிய இரத்த வங்கி அமைக்கப்படும்.
* ம‌ரு‌த்துவ‌க் கா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ம் ஜூ‌ன் மாத‌ம் தொட‌ங்க‌ப்படு‌ம்.
* மருத்துவ காப்பீட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* அரசு மருத்துவமனையில் மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.54 கோடி ஒதுக்கீடு.
* தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்திற்கு உயர்த்தப்படும்.
* சர்க்கரை நோய்க்கான டயாலிசிஸ் கருவி அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்.
* மருந்துப் பொருட்கள் வாங்க ரூ.224 கோடி ஒதுக்கீடு.
சமூக நலன்
* அரவாணிகள் நலத் திட்டத்திற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு.
* ஊனமுற்றோருக்கு மோட்டார் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
* சென்னையில் முதியோர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* சிறு வணிகர்களுக்கு தனி வாரியம்.
* அமைப்பு சாரா தொழிலாளர் நலன் காக்க ரூ.30 கோடி
* மீனவர் நலத் திட்டத்திற்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர் நலனுக்கு ரூ.2,615 கோடி ஒதுக்கீடு
* அகதிகள் முகாம் மேம்பாட்டுக்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு
* குடிசை, கோயில் இலவச மின்சாரத்துக்கு ரூ. 1,251 கோடி ஒதுக்கீடு
* ஏழைகளுக்கு வீடு வழங்க ரூ. 390 கோடி ஒதுக்கீடு
* நகர்புற குடியிருப்புக்கு ரூ. 441 கோடி ஒதுக்கீடு
* திருமண உதவி திட்டத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு
* மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு
* எரிவாயு அடுப்புகள் வழங்க ரூ. 140 கோடி ஒதுக்கீடு
* முதியோர் உதவித்தொகைக்கு ரூ. 911 கோடி ஒதுக்கீடு
* ஊனமுற்றோர் உதவி திட்டத்துக்கு ரூ. 75 கோடி ஒதுக்கீடு
* நெசவாளர் நலனுக்கு ரூ. 256 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுக்கு ரூ. 61 கோடி ஒதுக்கீடு
* சத்துணவுக்கு ரூ. 830 கோடி ஒதுக்கீடு
* குழந்தைகள், கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக்கு ரூ. 176 கோடி ஒதுக்கீடு
வரி விலக்கு மற்றும் வரி குறைப்புகள்
* அஞ்சரைபெட்டி மளிகைப் பொருட்களில் விடுபட்ட மிளகு, சீரகம் ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு.
* பருப்பு, பயறு, பட்டாணி ஆகிய பொருட் களுக்கு கொள்முதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* கையினால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டிக்கு தற்போதுள்ள 12.5 சதவிகித வரி ரத்து.
* கையினால் தயாரிக்கப்படும் தகர டின்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* தற்போது நெய்க்கு விதிக்கப்படும் 12.5 சதவிகித வரி, 4 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* ஊறுகாய், இரும்பு பெட்டகம், உலர்ந்த திராட்சை, சலவை தண்ணீர், குண்டூசி, ஊக்கு, ஜெம் கிளிப்கள் உள்ளிட்ட கிளிப்கள், ரப்பர்பேண்ட், ஸ்டாப்லர்பின் ஆகியவற்றுக்கும் 12.5 சதவிகித வரி, 4 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* ஐபாடு, எம்.பி.-3, எம்பி-4 ஆகியவற்றுக்கும் வரி குறைக்கப்படுகிறது.
* ஜவ்வரிசிக்கு விதிக்கப்படும் 2 சதவிகித வரி, ஒரு சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
* செங்கல், சூளை அடுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றுக்கு வரி விதிக்கப்படும்.
* இந்த வரிகுறைப்பு மற்றும் வரிவிலக்குகள் 1.4.2009-லிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
* இந்த வரிச்சலுகைகளால் அரசுக்கு ரூ.100 கோடி வரி இழப்பு ஏற்படும்.

Saturday, February 14, 2009

காதலர் தினம்

சிணுங்கல்கள் :

அடியே
நீ சினுங்குகிறாயா இல்லை
என்னை சினுங்க வைக்கிறாயா?
உன் சினுங்கலில் சிக்கி
சிற்பமாய் நிற்கிறேன்..
உளி கொண்டு கல்லை செதுக்கும் கலை அறிவேன்
உன் சினுங்கல் கொண்டு
எனை செதுக்கிய வித்தை இன்றே உணர்ந்தேன்

நல்ல வேலை நீ வாஜ்பாய் பேத்தியாக பிறக்கவில்லை
இல்லையேல்
உன்னை சினுங்க சொல்லியே
அந்த பாகிஸ்தானையே வென்று இருப்பார்...

நெருப்பை விட வலிமையனது உண்டா...?
அடித்து சொல்வேன்
நெருப்பை விட வலிமையானது உன் சிரிப்பு...
நெருப்பை கொண்டு எதையும் எரிக்கலாம்
ஆனால் சிரிப்பால் அந்த நெருப்பையே கூட அணைக்கலாம்....


என்னை காதலித்துவிடாதே

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது


நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.


நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது


என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

Friday, February 13, 2009

முன்னுரை

பெயர் காரணம் :

நெஞ்சு பொறுக்குதில்லையே…
ஏன் எதனால்…

ஊழல் மிகு உதவாக்கரை அரசாங்கத்தினை கண்டு
துரு பிடித்திருக்கும் அரசுஇயந்திரத்தை கண்டு
மனசாட்சியே இல்லாத அரசியல்வாதிகளை கண்டு
குற்ற உணர்வே இல்லாத அதிகாரிகளை கண்டு
அலட்சியமாக இருக்கும் இளைஞர்களை கண்டு
எலி உண்ணும் விவசாயியை கண்டு
பணம் உண்ணும் முதலைகளை கண்டு
பொறுப்பில்லாத வாக்காளர்களை கண்டு
லட்சியமற்ற வேட்பாளர்களை கண்டு
கொள்கை இல்லா கட்சிகளை கண்டு
பாவப்பட்ட மக்களை கண்டு

நெஞ்சு பொறுக்குதில்லையே…

இத்தனை கொவமிருந்தும் ஒன்றும் செய்ய இயலாத
என் நிலையினை எண்ணி பார்த்து

நெஞ்சு பொறுக்குதில்லையே…

முதல் பதிப்பு

வணக்கம்,

என் முதல் வலைபதிவின் முதல் பதிப்பு

நெஞ்சு பொறுக்குதில்லையே…
வெறும் வலைபதிவல்ல இது என் மனபதிப்பு

இனி எனது கோபம்,ஏக்கம்,ஏமாற்றம்,ஆசை,இன்பம்,
துன்பம்,எண்ணம்,கருத்து,விமர்சனம்,பாதிப்பு,அன்பு
என அனைத்து உள்ள குமுறல்களும்
உங்களை தேடி…