Monday, March 16, 2009

காதல் க(வி)தை


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...


ஜன்னல் ஓர பயணம் ,


அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்


நாணமென்னும் நூல் தொடுத்து எய்தாள் கள்ள பார்வை


மீண்டும் அதே ஜன்னலோரம் ,


காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்


அதே பார்வை ,


பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது


அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,


hello என்றேன் ஒரு நாள்பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை ,


ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது


தேநீர் சந்திப்பில்தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்


நாணம் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்விரல் பற்றியே நடக்கலானோம் ,


கை பற்றியே கடற்கரையும் அலங்தூம்சின்ந சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது


இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்


ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...


மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,


மணவறையில் நீ யாருடனோதந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்உன்னை கைதி என்று சொல்லி


என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்


உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்ஆண்டுகள் சில உருண்டன ,


அகவையும் அதிகரித்துபிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்புகலியாண ஏற்பாடும் தீவிரமானது ,


மணம் முடிப்பதற்கு முன்கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு


அறை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை


அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது


ஏன் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக


மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றால்


நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனித்தேன்


மேலே பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசுமௌனத்தின் இடையே


அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது


நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும்


ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .


நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை


மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை


நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்


அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது


ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

No comments: