Saturday, March 14, 2009

இன்றைய தலைமுறை...
















எதிர்காலத்தில் இதுபோல் மற்றொரு பதிவை எழுத கூடாது என வேண்டிக்கொண்டே, மிகுந்த குற்ற உணர்வுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.


நேற்றய இரவு என் நண்பர்களுடன் 'சிவா மனசுல சக்தி' திரை படத்தை பார்த்துவிட்டு சுமார் 12 மணி அளவிற்கு உணவு உண்ண paramount hotel க்கு சென்றோம். ( Paramount,Empire போன்ற ஹோட்டல்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்). நாங்கள் போனது வெள்ளிக்கிழமை இரவு (வார இறுதி) என்பதனால் ஜே ஜே என திருவிழா கூட்டம் போல இருந்தது Paramount. எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு கூட இப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை.


விஷயம் என்னவென்றால் அத்துணை பேரும் 20-30 வயது இளைஞர்கள். கூடவே இளம்பெண்களும். அங்கே போதையில் இல்லாதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடைக்கு கீழே ஆடை உடுத்தி இருக்கும் பெண்களை காணவே முடியாது.போதையில் அவர்கள் செய்யும் செயலை கண்டால் கோவம் மட்டும் அல்ல கவலையும் கூடவே வரும்.


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், நம் இந்திய பெண்கள்,இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்த பெண்கள் இரவு 12 மணிக்கு தண்ணி அடித்து விட்டு,அரைகுறை ஆடையுடன் தடவி கொண்டிருக்கிறார்கள் என்றால் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். இத்தனையும் பார்த்து விட்டு கண்டும் காணாமல் போல் வந்த நாங்களும் நாட்டின் நாளைய தூண்கள்.

3 comments:

Anonymous said...

enna kodumai sriram itu

Anonymous said...

enna kodumai sriram ithu..

Ulla Kumuralaludan
Ramachandiran

Anonymous said...

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்
33 சதவிதம் என்பது துணியின் அளவா ??

ராமச்சந்திரன் என்கிற வீரா