Friday, July 3, 2009

ரயில்வே பட்ஜெட் 2009-10


2009-10-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள:

* பயணிகள் கட்டணத்தில் உயர்வு இல்லை.

* சரக்குக் கட்டணத்திலும் உயர்வு இல்லை.

* தட்கல் முறையில் பயணச் சீட்டு பெறும் முறையின் கால அளவு 5 நாடகளில் இருந்து 3 ஆக குறைப்பு.

* 67 புதிய ரயில்கள் விடப்படும்.

* சென்னை சென்ட்ரல் உள்பட நாட்டிலுள்ள 50 முக்கிய ரயில் நிலையங்கள் முழுக்க முழுக்க சர்வதேசத் தரத்துடன் அமைக்கப்படும்.

* ரயில் நிலைய மேம்பாட்டுக்கு தனியார் துறையுடன் இணைந்து அரசு செயல்படும்.

* அனைத்து ரயில்களிலும் மகளிருக்கு தனியாக கழிவறை வசதி செய்யப்படும்.

* நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் புத்தக கடைகள், பொதுத் தொலைப்பேசி வசதி செய்து தரப்படும்.

* உடல் ஊனமுற்றோருக்கு என பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

* நீண்ட தூர ரயில்களில் மருத்துவர் ஒரு பணியமர்த்தப்படுவார்.

* நீண்ட தூர ரயில்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும்.

* மத தலங்களுக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள 49 ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.

* ராஜ்தானி, ஷதாப்தி ரயில்களில் பயனுள்ள பொழுதுபோக்கு வசதி.

* 200 புதிய டவுன் மற்றும் நகரங்களில் டிக்கெட் வழங்கும் வசதி.

* 200 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் பட்டுவாடா எந்திரங்கள் வைக்கப்படும்.

* வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளின் நிலைகள் மற்றும் டிக்கெட் உறுதியாகவிட்டதா என்பதை பயணிகள் அறிய எஸ்.எம்.எஸ்.

சேவை அறிமுகம்.

* அஞ்சல் அலுவலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.

* முக்கிய ரயில் மார்க்கங்களில் பெண் கமாண்டோக்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.

* குரூப் 'பி' ரயில்வே பணியாளர்கள் தேர்வில், மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

* ரயில்வே பணியாளர்களுக்கான மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

* வர்த்தக பயனபாட்டுக்கு ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் லீஸுக்கு விடப்படும்.

* உடல் ஊனமுற்ற பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், சிறப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும்.

* மூன்று ரயில் நிலையங்களுக்கு இடையே மதிய உணவு பார்சல் சேவை பெறும் வசதி.

* ரயில்வே மொத்தச் செலவு ரூ.81,685 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

* குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென 'லிஸாட்' என்ற புதிய மாதாந்திர ரயில்வே திட்டம். இதன்படி ரூ.25 ரூபாயில் ஒரு மாத பயணம் மேற்கொள்ளலாம். இது, நூறு கிலோ மீட்டர் பயணத்துக்குப் பொருந்தும்.

* பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகித சலுகை.

* கோல்கத்தா மெட்ரோ ரயிலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சலுகை.

* கோல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் பெண்கள் சிறப்பு ரயில்கள்.

* கோல்கத்தா மெட்ரோ ரயில்வே மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.

* ஹவுரா-மும்பை; சென்னை-டெல்லி; மும்பை-ஆமதாபாத்; டி்லலி -எர்ணாகுலம் இடையே உள்பட 12 புதிய பாயின்ட் டு பாயின்ட் ரயில்கள்.

தமிழகத்துக்கு 6 ரயில்கள்

* சென்னை - டெல்லி இடையே பாயின்ட் டூ பாயின்ட் ரயில்.
* கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்.
* மதுரை - சென்னை இடையே வாரம் இருமுறை ரயில்.
* கோவை-சொர்னூர் இடையே ரயில்
* திருநெல்வேலி-பிலாஸ்பூர்
* திருநெல்வேலி - ஹபா இடையே ரயில்

* அனைத்து மாணவர்களுக்கும் 60% பயணக் கட்டணச் சலுகை.

* 800 புதிய முன்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.

* 309 ரயில் நிலையங்கள் நவீனபடுத்தப்படும்

* ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

* பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

No comments: