
நிர்வாக சீர்கேட்டில் திளைக்கிறது தமிழக அரசு.
நேற்று தாக்கல் செய்யப்பட மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தமிழக அரசின் தவறுகளும், அலட்சியமும் அதனால் ஏற்பட்ட பெருத்த நஷ்டமும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது... அவற்றில் இருந்து சில:
சென்னை பெருநகர மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியை கூட செலவு செய்யவில்லை.
சாலைகளை அகலப்படுத்தும்போழுது மின் கம்பங்களை மாற்றி நடுவதற்காக ஒதுக்கப்பட்ட பத்தொன்பது கோடி ரூபாயில் ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை.. (சாலைகளும் மேம்படுத்தப்படவில்லை, மின் கம்பங்களும் மாற்றப்படவில்லை என்பது வேறு விஷயம்)
கல்விக்கான ஒதுக்கீட்டிலும் மிச்சம் வைத்து இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி தொடர்களுக்கான வரி விளக்கின் மூலமாக மட்டும் இருபத்து ஐந்து கோடி ரூபாய் நஷ்டம்.
பல்வேறு திட்டங்கள் தேவையற்ற கால தாமதங்களுக்கு ஆளாகி அதனால் மட்டுமே சுமார் நூறு கோடி நஷ்டம்.
மக்களுக்காக பயனளிக்காத திட்டங்கள் மூலம் முப்பது கோடி ரூபாய் நஷ்டம்...
கருணாநிதிக்கு கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது அந்த CAG அறிக்கை.
திருந்துமா திமுக அரசு???
http://timesofindia.indiatimes.com/articleshow/4809524.cms
No comments:
Post a Comment