Tuesday, July 7, 2009

தபுசங்கர் மொழி


நான் ரசித்த டாப் 3 தபுசங்கர் கவிதைகள்


எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்......?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,

போதும்!



'என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!








உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து'

அய்......எனக்கா இந்த நகை'

என்று கத்தினாய்.
நகையோ,
'அய்......எனக்கா இந்தச் சிலை'

என்று கத்தியது.

1 comment:

Unknown said...

Nattamai - Theeruppu super. valuable comments