Tuesday, June 30, 2009

உதவிய நெஞ்சங்கள்

நண்பர்களே வணக்கம்,

கடந்த ஏழு நாட்களில் எனது வலைப்பூவை பார்வை இட்ட சுமார் 200 பேர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பார்த்தது 2oo ஜோடி கண்கள் என்றாலும் உதவிக்கரம் நீட்டிய நெஞ்சங்கள் வெறும் மூன்றே மூன்று. அவர்களும் எனது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை இங்கு குறிபிட்டே ஆகவேண்டும்.

பணம் இருப்பவரிடம் மனம் இல்லை
மனம் இருப்பவரிடம் பணம் இல்லை

நம்பிக்கை என்பதும் இங்கு பல பேருக்கு கேள்விக்குறியாக இருந்தது என்பதை நாங்கள் அப்பட்டமாக உணர்ந்தோம். உதவி செய்தவர்கள் எனது நெருங்கிய நண்பர்கள் என்பதே இதற்கு சாட்சி.

சுயநலம்,நம்பிக்கையின்மை என பல தடங்கல்களையும் தாண்டி நேசக்கரம் நீட்டிய அந்த மூன்று உள்ளங்களுக்கும், எனது சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவிக்கிறேன்.

SIVASHANKAR - 10,000
VENKATESH - 100
R.S.THANDABANI - 1,000
RAMESH - 500
RAMACHANDIRAN - 200
SRIRAM - 5,000

மொத்தம் 16,800 ரூபாயும் இந்த வார இறுதிக்குள் ரமேஷிடம் ஒப்படைக்கப்படும்.

நூறாவது மாடி போகவேண்டும் என்றாலும், முதல் அடி முதல் படியில் தான் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து, இந்த நால்வர் படை போக போக நூறு,ஆயிரம் என பெருகும் என்ற நம்பிக்கை வைத்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும் ஸ்ரீராம் எனும் ஒரு சாமானியன்.

No comments: