Monday, June 15, 2009

குழந்தையும் தெய்வமும் ஒன்று








"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. பருவம் தவறிப் பயிர் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத விளைவுகளே ஏற்படும். குழந்தைத் தொழிலாளர் பெருகுவது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் அவமானம்; மன்னிக்க முடியாத குற்றம்.

புகழ்பெற்ற "ராய்ட்டர்' என்ற செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களாக மூன்று நாடுகளைக் குறிப்பிட்டிருந்தது. அவை ஈராக், சோமாலியா மற்றும் இந்தியா, (பயங்கரவாத மற்றும் ஏழ்மையான நாடு,அடுத்து நம் நாடு ) இந்தியாவுக்கு இந்த இழிநிலை வருவதற்கு என்ன காரணம்? குழந்தைகளிடம் நமக்குள்ள அக்கறையற்ற போக்குதான்.

இதைவிடத் திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

இந்தியாவில் 10 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 3 கோடி பேருக்கு இருக்க இடமே இல்லை. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் குடிசை இடிக்கப்பட்டு தெருவில் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால் இதன் உண்மை தெரியும்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.


"குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? இதே நாட்டில் தான் வடக்கே ஒரு பொற்கோவில் ,தெற்கே ஒரு பொற்கோவில் என்றும் , ஒரே நாளில் கோடிக்கணக்காக குவிக்கும் ஆலையங்கள் என்றும் தெய்வத்தை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தெரியாதா "குழந்தையும் தெய்வமும் ஒன்று " என்று.

என்ன செய்ய இரவு வீடு திரும்பும் பொழுது சிக்னலில் கையேந்தும் சிறுவனை காணும் பொழுதும், மதியம் உணவு உண்ணும் உணவகத்தில் மேஜை துடைக்கும் சிறுவனை காணும் பொழுதும், காலை டீ கடையில் கிளாஸ் கழுவும் சிறுவனை காணும் பொழுதும் மனம் வலிக்க தான் செய்யும்.


அனைத்தும் அறிந்தும் ஒண்ணுமே செய்ய இயலாதவனாய் ஒரு சாமான்யன்.


No comments: