Monday, September 6, 2010

அவனும் அவளும்

அவன்
சிணுங்கும் அலைபேசியை

செல்லமாய் எடுத்தனைக்க

யாரோ ஏதோ எதற்கோ பேச

தாமரை இலை தழுவும் நீராய்

ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக

அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்

அமிர்தச் சுவை தேடி அள்ளி

காது மடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தை

அடடே, உனக்கு வந்திடுச்சா

மாத்தி பண்ணிட்டேனா”துடிதுடிக்கத்

துண்டிக்கிறாய் இணைப்பை

கூடவே நம்பிக்கை நரம்பையும்

அவள்

சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி

அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து

உன் எண் ஒத்திஏதோ இணைப்பில் இருக்கும்

உன்னை தொடமுடியாமல் துவண்டு

இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்

காது மடலோடுஇனிக்கும் உன் குரல்தேட

பதட்டத்தில் உதடு உதறி

பொய் உதிர்கிறது ”அடடே, உனக்கு வந்திடுச்சா,

மாத்தி பண்ணிட்டேனா” துவண்டு துண்டிக்கிறேன்

இணைப்பை தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி

---- ஈரோடு கதிர் -----

No comments: