Thursday, September 23, 2010

உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்... இந்த வாக்கியத்தை பல இடங்களில், பல முறை, பல பேர்களின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நான் எனது வலை பூவில் இப்படியொரு இக்கட்டான நிலையில் 'உறுப்பு தானம்' என்னும் மிக சிறந்த மனிதாபிமானத்தை தெரிய படுத்துகிறேன்.

அருள்பிரகாஷ் என்னும் நண்பனின் மாமா திரு.கே.பாலச்சந்தர் சாலை விபத்து ஒன்றில் மிக பலமாக காயமடைந்தார்.தீவிர பரிசோதனைக்கு பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்து, உயிர் பிழைப்பது கடினம் என்றும், ஓரிரு நாட்களில் இறந்து விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்து, avarin இருதயம், நுரையீரல், கண்கள், சிறு நீரகங்கள் உயிருக்கு போராடும் சிலருக்கு பொறுத்தப்பட்டது.
பாராட்டப்பட வேண்டியவர் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே...
மிக அவசரமாக இந்த செய்தியை தெரியபடுத்துவதால், உறுப்பு தானம் பற்றிய அறிய விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் சேகரித்து தருகிறேன்...

No comments: