Monday, September 14, 2009

அண்ணா நூற்றாண்டு SPECIAL

அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் அது. அவருடைய காஞ்சீபுரம் வீட் டில் திடீரென்று ஃபிரிட்ஜ் இருப்பதைப் பார்த்தார். வியப் புடன் ''இதை எப்போது வாங்கி னீர்கள்?'' என்று வீட்டாரிடம் விசாரித்தார்அண்ணா.

''மாதத் தவணையில் வாங்கி னோம். நீங்கள் இங்கு வரும் போது, உடன்வரும் அதிகாரிகள் 'ஐஸ் வாட்டர்' கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கி வர வேண்டியிருக்கிறது'' என்று மருமகள் பதில் கூறவும், ''நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம் மிடம் இருப்பதைத் தந்தால் போதும். நமது வசதிக்கு ஏற்ப வாழ்வதுதான் சரியான முறை'' என்றார் அண்ணா.

அண்ணா காபி, டீ தவிர, வேறு ஓவல், ஹார்லிக்ஸ் இப்படி விலையுயர்ந்த பானங்களை அருந்த விரும்பியதில்லை.

அண்ணாவுக்குக் கார் ஓட்டவும் தெரியும். 1953-ல் அவரிடம் இருந்த எம்.டி.ஸி.4758 இந்துஸ் தான் காரை, நகரை விட்டுக் கடந்ததும் அவரே ஓட்டுவார். இருபது மைல் வேகத்தை கார் தாண்டாது.

கல்லூரி நாட்களிலிருந்து நாளும் புத்தகங்களைப் படிக் கும் பழக்கம் உடையவர் அண்ணா. எடுத்த புத்தகத்தைப் பொழுது விடிந்தாலும் படித்து முடித்துவிட்டே தூங்குவார்.


விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு, பொருளியல் என நூலகத்தில் புதிதாக வந்த எதை யும் அவர் படிக்காமல் விட்ட தில்லை. பழைய புத்தக வியா பாரிகள் இருவர் அவருடைய நண்பர்களாக இருந்தனர். வாரம் ஒரு முறை ஒரு சாக்கு மூட்டையில் பழைய புத்தகங் கள் அவரைத் தேடி வரும். மறு வாரம் புதிய மூட்டை வந்த பின், பழைய மூட்டை திரும்பும். சகோதரியின் மகளுக்கு 'கான் சர்' வந்ததும், கான்சர் வியாதி சம்பந்தமாக வந்துள்ள புத்தகங் கள் அனைத்தையும் வாங்கிப் படித்து முடித்துவிட்டார் அண்ணா.

அறுவைச் சிகிச்சை முடிந்து அண்ணா அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்தபோது, இந்தியத் தூதராக இருந்த தவானின் விருந்தாளியாக அவர் ஒரு நாள் இருந்தார். அப்போது அவர் படிப்பதற்காக தவான் தன் நூலகத்திலிருந்து பல புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அண்ணா அவற்றை லேசாகப் புரட்டிவிட் டுத் திரும்ப வைத்துவிட்டார். ''என்ன, இவை உங்களுக்கு விருப்பமில்லாத புத்தகங்களா?'' என்று தவான் கேட்க, ''இல்லை, இவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே படித்து முடித்து விட்டேன்'' என்றார் அண்ணா. வியந்து போனார், இந்தியத் தூதர். காரணம், இங்கிலாந்தில் வெளியான சமீப காலப் புத்த கங்கள் அவை.

இதனால் தான் இவர் பேரறிஞர்...

No comments: