Monday, September 14, 2009

ஈரம்

அறிவழகன் இயக்கி, இயக்குனர் சங்கர் தயாரித்து வெளிவந்திருக்கும் வித்யாசமான thriller ஈரம். இப்படிஒரு கதையை தைரியமாக தந்தமைக்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதல் கைதட்டு. மிருகம் ஆதி, மௌனம் பேசியதே நந்தா, யூத் சிந்து மேனன், சரண்யா மோகன் போன்ற சாதாரண நட்சத்திரங்களே நடித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஈரம் கதையை மட்டுமே நம்பி எடுக்க பட்ட படம்.

தண்ணீர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. யாவரும் நலம் சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய படம். இயக்குனர் அறிவழகன் போல கவனம் ஈர்க்கும் மற்றுமொரு நபர் கேமரா மேன் மனோஜ் பரமஹம்ஸ. வரவேற்கிறோம் தமிழ் திரை உலகிற்கு.

S பிக்சர்ஸை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். தொடர்ந்து மிக தரமான படங்களையே தந்து, புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரும் S Pictures தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப்ரசாதம். இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. சன் பிக்சர்ஸ், விகடன் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவீஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இதனை கவனிக்குமா...?

எனது மதிப்பீடு : 6/10

No comments: