Thursday, October 29, 2009

குடியரசுத் தலைவர்

ஆண்டாண்டு காலமாக இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு - குடியரசுத் தலைவர் என்னும் பொம்மை பதவி தேவை இல்லை என்பது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் சமீப காலமாக எனக்கும் அது சரி தானோ என்றே எண்ண தோன்றுகிறது. காரணம் தேவை இல்லாத ஆடம்பரங்கள் , தேவை இல்லாத செலவினங்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், கவலைப்படாமல் அயல்நாட்டு சுற்றுலாவிற்கு கிளம்பி விடுகிறார் நாட்டின் முதல் குடிமகன். பொதுமக்களின் வரிபணத்தை செலவு செய்வதற்கு ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாங்களோ...

ஒரு பக்கம் புயல் வெள்ளம் மறு பக்கம் வறட்சி என காலநிலை மாற்றம், அமைச்சரின் SPECTRUM ஊழல், ரயிலையே கடத்தும் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம், பாகிஸ்தான் சீனா இலங்கை என அண்டை நாடுகளின் நிலையற்ற உறவு, தீவிரவாத அச்சுறுத்தல், வேலையின்மை, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என நாட்டின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகும்.

கடந்த ஓராண்டில் பிரதீபா படேல் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் கீழே :

October 26 to October 29, 2009 - The President's visit to United Kingdom

September 06 to September 08, 2009 - The President's visit to Tajikistan

September 02 to September 06, 2009 - The President's visit to Russia

April 23 to April 27, 2009 - The President's visit to Poland

April 20 to April 23, 2009 - The President's visit to Spain

November 29 to December 01, 2008 - The President's visit to Indonesia

November 24 to November 28, 2008 - The President's visit to Vietnam

November 05 to November 08, 2008 - The President's visit to Bhutan

April 20 to April 25, 2008 - The President's visit to Chile

April 16 to April 20, 2008 - The President's visit to Mexico

April 12 to April 16, 2008 - The President's visit to Brazil

இந்த செலவில் பாதியை குறைத்திருந்தால் கூட எத்தனை பள்ளிகள் கட்டியிருக்கலாம், எத்தனை மருத்துவ மனைகள் உருவாக்கி இருக்கலாம், எத்தனை விவசாயிகளின் தற்கொலையை தவிர்த்திருக்கலாம், எத்தனை குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை காப்பாற்றி இருக்கலாம்... இன்னமும் ஒரு ரூபாய் அரிசியை வாங்க ரேஷனில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் மக்கள் எத்தனை கோடி...

இதையெல்லாம் உணர்வாரா ஜனாதிபதி...?
ஊர் சுற்றி திரிவதை நிறுத்துமா பாட்டி...?

2 comments:

Unknown said...

Oru Chinna vendukol, Dr.A.P.J Adbul Kalam avargal Janathibathiyaga erunda bodu seitha selavugalai pattiyalida mudiyuma? Therindukolla aavalaga erukiradhu.

ஸ்ரீராம் எனும் சாமான்யன்… said...

மன்னிக்கவும் சத்ரு. கடந்த கால தகவல்கள் ஏதும் அரசு வலைத்தளங்களில் பெற இயலவில்லை. கிடைத்தாலும் அதை பற்றி அலசுவது அவ்வளவு நாகரீகமாகாது.