Sunday, May 1, 2011

வானம்...

தெலுங்கில் வேதம் தமிழில் வானம்... 'எவண்டி உன்ன பெத்தான்' பாடலாலும், அனுஷ்கா உபயத்தாலும் வானத்திற்கு கொஞ்சம் நல்ல openinge கிடைத்தது. சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், பரத், 'பசங்க' வேகா, சந்தானம் என மிக பெரிய நட்சத்திர பட்டாளம். இத்தனை இருந்தும் படம் என்னமோ ரசிக்க வைக்க வில்லை. ஐந்து கதைகள் தனி தனியாக, இறுதியில் ஒரு இடத்தில சேர்கிறார்கள் அனைவரும். தேவை இல்லாத காட்சிகள், இழுவையான காட்சிகள், சுவாரசியமில்லா காட்சிகள் என குறைகள் நிறைய.



படத்தின் மிக பெரிய பலம் climax. கடைசி 10 நிமிடங்கள் தான் படமே. முதல் 2 மணி  நேரம் பார்க்காமல் இறுதி 10 நிமிடங்கள் பார்த்தால் மட்டுமே போதுமானது. சிம்பு காட்சிகள் மட்டுமே கொஞ்சம் கலகலப்பாக போகிறது. அனுஷ்கா பொண்ணு அப்பிடி இருக்கு. அந்த 'கடவுள் எங்கிருக்கிறான்' பாடல் வரிகள் கவனம் ஈர்க்கிறது. மற்றபடி படத்தில் சொல்வதற்கு ஒண்ணுமில்ல.

எனது மதிப்பீடு : 3/10

No comments: