Saturday, July 4, 2009

மாயாண்டி குடும்பத்தார்


ஒரு typical கிராமத்து குடும்பத்தை வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ராசு மதுரவன். பத்து இயக்குனர்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதை விட மிரட்டி இருக்கிறார்கள் (தருண் கோபி நீங்கலாக) என்பதே உண்மை. அதிலும் சிங்கம்புலி, சீமான்,பொன்வண்ணன் போன்றவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். காலம் மாறி வரும் சூழ்நிலையில் இப்படி ஒரு மண்வாசனை கதையை, பெரிய நடிகர்கள் இல்லாமல் வெறும் இயக்குனர்களை வைத்தே தைரியமாக தந்ததற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

சபேஷ் முரளி ஓரிரு இடத்தில் பளிச்சிடுகிறார்.வேகமாக நகரும் திரை ஓட்டத்திற்கு பாடல்கள் வேக தடையே. படத்திலேயே நடிப்பிலும் சரி,expressions சரி , மொக்கை தருண் கோபி தான். மற்ற படி தமிழ் சினிமாவின் இன்றைய நிலைக்கு இது போன்ற படங்கள் வருவது மிக மிக இன்றியமையாதது.

எனது மதிப்பீடு : 6/10

No comments: