டிடி அந்நாளில் இருந்த ஒரே தொலைக்காட்சி அலைவரிசை. டிவி என்றாலே டிடி தவிர ஒன்றும் கிடையாது.அதுவும் மிகப்பெரிய ஆண்டெனா வைத்தாக வேண்டும்.
நான் பிறந்த கிராமத்தில் இருந்த ஓரிரு தொலைக்காட்சிகளில், எங்கள் வீட்டு டிவியும் அடக்கம். பின் மாலை நேரங்களிலேயே தமிழ் ஒலிபரப்பு தொடங்கும் என்பதனால் , இருக்கிற வேலைகளை விரைவாக முடித்து அனைவரும் டிவி முன் அமர்ந்து விடுவார்கள்.

அதுவும் வெள்ளி இரவு வரும் ஒளியும்ஒலியும், ஞாயிறு மாலை திரைப்படங்கள், புதன் இரவு Chitrahar, போன்ற நிகழ்ச்சிகள் மிக பெரிய ஆதரவு பெற்றன. தவிர இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடிகொளிட்டதே டிடி தான். அந்நாளில் டிடி அனைத்து கிரிக்கெட் ஆட்டங்களையும் ஒளிபரப்பியது. நான் கிரிக்கெட்டை பார்த்தது,ரசித்து,கற்றுகொண்டது என அனைத்தும் டிடி மூலமாக நடந்தது.
வெறும் திரைப்பாடல்கள்,திரைப்படங்கள் என நில்லாமல் கல்வி, விளையாட்டு, பொதுஅறிவு, செய்திகள் போன்ற பலதரப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் தயக்கமின்றி ஒளிபரப்ப பட்டன. ராஜிவ் காந்தி மரணம் பற்றிய செய்தி டிடி யில் வெளியான போது ஊரே அமைதியில் ஆழ்ந்திருந்தது. மூன்று நாட்கள் துக்கமும் அனுசரிக்க பட்டது.
தொடக்கத்தில் மெதுவாக நுழைந்த தனியார் தொலைக்காட்சிகள் போகப்போக பிரம்மாண்டமாக தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. விளைவாக இன்று நூற்றுகணக்கான தனியார் அலைவரிசைகள் ஆதிக்கம். நம்பகத்தன்மை இழந்து, விளம்பர மோகம் கொண்டு, வியாபார முகம் எடுத்து,தனியாக Sensor Board கேட்க்கும் வரை வந்து நிற்கிறது இன்றைய தொலைக்காட்சி உலகம். நேற்று வந்த கலைஞர் தொலைக்காட்சியும்,இசையருவியும் கொண்ட ரசிகர்கள் எண்ணிகையை கூட 50 வருட பாரம்பரியம் கொண்ட டிடி தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை.
யாரை குற்றம் சொல்வது ?
நவீன தொழில்நுட்பம் பலவற்றை வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருக்கும் பிரசார் பாரதியையா ? இல்லை பிரசார் பாரதிக்கு சரியான அதிகாரமும், பொருளுதவியும் தராத அரசையா ? இல்லை தலைமுறை மாற்றம் என சொல்லிக்கொண்டு சரியானவற்றை வரவேற்க தவறிய இன்றைய ரசிகர்களா ?
யாரை குற்றம் சொல்வது ?
எது எப்படியானாலும் தூர்தர்ஷன் இன்னும் செழிப்பாக வளர்ந்து நூற்றாண்டு விழா காணவேண்டுமென்பதே நாட்டில் பரவலாக இருக்கும் கோடிக்கணக்கான ரசிக மக்களின் மனதில் இருக்கும் பெரிய ஆவல்.
2 comments:
sriram, Are you brother of Jayashri and Charu??
-Vidhya
Jayashri.... ?
I have a sister named Jayamalika...
Post a Comment