Friday, September 4, 2009

கார்பரேட் உலகம்

உண்மையை உரக்கசொல்லும் உழவனின் கவிதை...


தாய்மாமனாய் இருக்கவேண்டிய
தங்கை மகள் காதணி விழா

உடன்பிறந்தவனாய் முன் நிற்கவேண்டிய
சித்தி மகள் திருமணவிழா

மஞ்சள் நீரூற்றி விளையாடும்
அம்மன் கோவில் பொங்கல் விழா

கட்டிப்பிடித்து அழுததுபோக
கண்துடைத்து ஆறுதல் சொல்லவேண்டிய
பள்ளித் தோழனின் தந்தை மரணம் .......

இப்படி எத்தனையோ
நல்லவை கெட்டவைகளுக்குப்
போகமுடியாமல் போனது!

மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!

உழவன்

No comments: