தமிழகத்தில் உள்ள தொடக்க-நடுநிலைப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்க அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியதாகவும், ஆனால் "எல்காட்' நிறுவனத்தின் மெத்தனத்தால் கடந்த ஓராண்டாக பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2008-2009-ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் (சர்வ சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.) மூலம் தொடக்க - நடுநிலைப் பள்ளிகளுக்கு 3,000 கணினிகள் வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. இதற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கணினிகளை வாங்கும் பொறுப்பு அரசின் "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

உமாசங்கர் இடமாற்றத்தால்...: டெண்டர் விடும் நேரத்தில் "எல்காட்' நிர்வாக இயக்குநராக இருந்த உமாசங்கர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், பள்ளிகளுக்கு கணினி வாங்குவதற்கான டெண்டர் கோருவதில் காலதாமதம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
"அதேநேரத்தில் அரசு ஒதுக்கிய ரூ.12 கோடி நிதி, எல்காட் நிறுவனப் பெயரில் வங்கியில் உள்ளது. இதன்மூலம் வரும் வட்டித் தொகையை எல்காட் நிறுவனமே பெற்று செலவு செய்து வருகிறது' என்ற புகார் எழுந்துள்ளது.
கணினி வழங்குவது எப்போது? இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ""பள்ளிகளுக்கு ரூ.12 கோடியில் கணினி வாங்கும் பணி, எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் எல்காட் நிறுவனத்தில் டெண்டர் கோருவதில் காலதாமதம் நிலவியதால் கணினிகளை சரியான நேரத்தில் பெற முடியவில்லை.
கடந்த 2009 மே-ஜூன் மாதத்தில்தான் டெண்டர் கோரும் பணி முடிந்ததாக "எல்காட்' நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 6 நிறுவனங்களிடம் இருந்து கணினி வாங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பணி ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும்'' என்று தெரிவித்தனர்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தூங்கிட்டு இருக்காரே...
No comments:
Post a Comment