Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணா

அண்ணா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட தலைவர்......

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய மாபெரும் தலைவர்..... தமிழனுக்கு தன்மான உணர்வை உணரவைத்த நம் காஞ்சித்தலைவர்...

அண்ணாவின் தாராக மந்திரம்.....
கடமை... கண்ணியம்.... கட்டுப்பாடு...

"கடமையை மட்டுமே கண்ணாகக் கொண்டு வாழ்ந்து, தமிழகத்து இருளை அகற்றிய உதயச்சூரியன்..."

"அவருடைய கனவு தமிழகத்தை உருவாக்க அவருடைய உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் இழந்தவர்..... "

"தனக்கென்று எதையும் தேடிக்கொள்ளா தன்னலம் மற்றத் தலைவர்...."
"அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ் நாள் முழுவதும் தியாகம் செய்த தாணைத்தலைவர்.."

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சிபுரத்தில் நெசவு தொழிலாள குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

அவரது வரலாறை நேரமிருந்தால் கொஞ்சம் படித்து பாருங்கள்...

No comments: