Saturday, February 14, 2009

காதலர் தினம்

சிணுங்கல்கள் :

அடியே
நீ சினுங்குகிறாயா இல்லை
என்னை சினுங்க வைக்கிறாயா?
உன் சினுங்கலில் சிக்கி
சிற்பமாய் நிற்கிறேன்..
உளி கொண்டு கல்லை செதுக்கும் கலை அறிவேன்
உன் சினுங்கல் கொண்டு
எனை செதுக்கிய வித்தை இன்றே உணர்ந்தேன்

நல்ல வேலை நீ வாஜ்பாய் பேத்தியாக பிறக்கவில்லை
இல்லையேல்
உன்னை சினுங்க சொல்லியே
அந்த பாகிஸ்தானையே வென்று இருப்பார்...

நெருப்பை விட வலிமையனது உண்டா...?
அடித்து சொல்வேன்
நெருப்பை விட வலிமையானது உன் சிரிப்பு...
நெருப்பை கொண்டு எதையும் எரிக்கலாம்
ஆனால் சிரிப்பால் அந்த நெருப்பையே கூட அணைக்கலாம்....


என்னை காதலித்துவிடாதே

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ


நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது


நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.


நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது


என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

1 comment:

Ashok said...

எங்க சுட்டது,தபு சங்கர் கவிதை மாதிரி தெரியுது?!