Wednesday, December 16, 2009

மக்கள் சக்தி கட்சி

உள்சுயாட்சி:

கட்சித் தலையீடு இல்லாத, சுய அதிகாரம், நிதி ஆதாரம் பெற்ற உள் சுய ஆட்சி.
கிராமப் பஞ்சாயத்தில் இருப்பது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

குறைவான, விரைவான அரசாங்கம்:

இலஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான, விரைவான அரசாங்கம்... அதே சமயம் குறைவான அரசாங்கம். மக்களின் தேவை, வசதி கருதி குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்கள் வருடம் முழுவது இயங்க வழிவகை செய்தல்.

பூரண மதுவிலக்கு:

அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பத்திலுள்ள பெண்கள்,குழந்தைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல்.

தனி ஈழமே தீர்வு:

மொழி, மத, இன வேற்றுமை கொண்ட சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆட்பட்டு அடிப்படை மனித உரிமைகளைக்கூட பெறமுடியாமலும், நிதமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமலும் தவித்து வரும் ஈழ மக்களுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு:
மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார சமத்துவ நீதியை வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு.

சாதிகளற்ற சமுதாயம்..
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சாதிகள் அற்ற சமுதாயம் அமையப் பாடுபடுதல்.

கூட்டுத் தலைமை :
மாநில அளவிலிருந்து கிராமக் கிளை வரை சுயநலம், பதவிப் போட்டிகளற்ற, ஜனநாயகத்தன்மை மிகுந்த கூட்டுத்தலைமை கொண்ட உள்கட்சி கட்டமைப்பு.

விரிவான கொள்கைக்கு
http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=54&Itemid=81


மேலும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது.

வேட்பாளர் : திரு எஸ். வாஷிங்டன்

சின்னம் : டி.வி.

மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, தங்களது அன்றாட கணக்கு வழக்குகளை அவர்கள் தங்களது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=51&Itemid=85

அவர்களது முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

No comments: