Thursday, December 17, 2009

சுகந்தி டீச்சர் -- பாரதி கண்ட புதுமை பெண்

இன்னும் ஒரு பள்ளி வேன்விபத்து... வேதாரன்னியத்தில்...

பள்ளி வேனை ஒட்டி வந்த டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம்! செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது..விபத்து நடந்தவுடன் டிரைவர் ஓடிவிட்டார்....

கிளீனர் தான் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்... வேனுக்குள் இருந்த ஆசிரியை சுகந்தி வேனுக்குள் இருந்து வெளிவர முடியாத சூழலிலும் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை வெளியில் அனுப்பி கிளீனர் உதவியுடன் காப்பாற்றி இருக்கிறார்...

பதினோரு குழந்தைகளை தான் அவரால் காப்பாற்ற முடிந்தது....அவருக்கு நீச்சல் தெரியாததால், அவரும் அந்த குலத்திலேயே மூழ்கி இறந்து விட்டார்.... தனது உயிரை பொருட்படுத்தாமல், தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அது தான் வீரம்... அது தான் பாராட்டப்படவேண்டிய மனித பண்பு...
தஞ்சை பெண்களின் வீரம் பற்றி குந்தவை நாச்சியார் சொல்வார்... இங்கே இயல்பாகவே துணிச்சல் எங்களுக்கு வருகிறது என்று! உண்மை தான் போல!

சுகந்தியை பற்றி படிக்க படிக்க நெஞ்சு விம்முகிறது!

அவருக்கு 21 வயது தான் ஆகிறது.. பட்டதாரி... திருமணம் ஆகவில்லை! எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பள்ளிக்கு அந்த வேனிலேயே சென்று வருகிறார்.... குறைந்த சம்பளம் தான்!

அவருடன் குளத்தில் இறந்த குழந்தைகள் பெரும்பாலும் அவரது கிராமத்தை சார்ந்தவர்கள் தான்..... பதினோராவது குழந்தையை காப்பாற்றும்போது அந்த குழந்தை அவரது கை நழுவி குளத்துக்குள் ஆழத்தில் சென்றுவிட்டதாம்.... இவர் நீச்சல் தெரியாத நிலையிலும் உள்ளே குனிந்து அந்த குழந்தையை வெளியே எடுத்து இருக்கிறார்..... அதற்குள் இவர் மூச்சு திணறி.... எல்லாம் முடிந்து விட்டது.... ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்!

எல்லோருக்கும் செல்ல பெண்ணாக அந்த கிராமத்தில் வளம் வந்த சுகந்தி இப்போது இல்லை! எனினும் தன்னால் ஆன செயலை எல்லாம் இறுதி வரை செய்து விட்டு தான் மறைந்து இருக்கிறார்!

இதை பற்றி ஏடுகளில் வந்த செய்திகள் சில...

’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09

’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09

மற்றவர்களை உயிரோடு எரிப்பவர்களை தீரர்கள் என்றும் அஞ்சாநெஞ்சன் என்றும் பேசும் தமிழகம், இந்த சின்ன பெண்ணின் வீரத்தை, தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கவா போகிறது????

கேட்குமா நீதியின் குரல்

நீதி​மன்​றங்​க​ளில் தேங்​கிக்​கி​டக்​கும் வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து தீர்ப்​பு​க் கூ​றா​விட்​டால் நீதித்​துறை நடை​மு​றையே நாள​டை​வில் நொறுங்​கி​வி​டும்,​​ மக்​க​ளுக்கு நீதித்​துறை மீதே நம்​பிக்கை போய்​வி​டும்,​கிளர்ந்து எழு​வார்​கள் -​ கல​கம் வெடிக்​கும் என்று எச்​ச​ரித்​தி​ருக்​கி​றார் உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன்.​ இப்​போ​தா​வது இது​பற்​றிய கவலை நீதித்​து​றைக்கு எழுந்​தி​ருக்​கி​றதே,​​ மகிழ்ச்சி.

​சம​ர​சப் பேச்​சு​வார்த்தை மூலம் வழக்​கு​க​ளைத் தீர்க்​கும் மாற்று வழி குறித்த கருத்​த​ரங்​கம் பெங்​க​ளூ​ரில் நடை​பெற்​றது.​ அதில் பங்​கேற்​றுப் பேசி​ய​போது கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன் இந்த எச்​ச​ரிக்​கையை விடுத்​தி​ருக்​கி​றார்.​வழக்​கு​கள் தேங்​கி​வ​ரு​வது குறித்து கடந்த 20 வரு​ஷங்​க​ளா​கவே யார் யாரோ எச்​ச​ரித்து வரு​கின்​ற​னர்.​ மத்​திய சட்​டக் கமி​ஷன்,​​ உயர் நீதி​மன்​றங்​கள்,​​ உச்ச நீதி​மன்​றம்,​​ மத்​திய சட்​டம்,​​ நீதித்​து​றைக்​கான நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட ஆ
லோ​ச​னைக் குழு போன்​றவை இந்த எச்​ச​ரிக்​கை​களை விடுத்து வரு​கின்​றன.​ ஆனால் உரிய பரி​கார நட​வ​டிக்​கை​கள்​தான் போது​மான அள​வில் எடுக்​கப்​ப​டா​மல் இருக்​கின்​றன.​

பெங்​க​ளூர் கருத்​த​ரங்​கில் பேசிய உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதி​பதி நாட்​டில் போதிய எண்​ணிக்​கை​யில் சார்பு நீதி​மன்​றங்​கள் இல்​ல​தா​ததே வழக்​கு​க​ளின் தேக்​கத்​துக்கு முக்​கிய கார​ணம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​ வழக்​கு​கள் தேங்​கு​வ​தற்​கான பல்​வேறு கார​ணங்​க​ளில் அது​வும் ஒன்று என்​பதை மறுக்க முடி​யாது.​இப்​போ​துள்ள 16,000 சார்பு நீதி​மன்​றங்​க​ளில் சுமார் 2,000-க்கும் மேற்​பட்ட நீதி​ப​தி​க​ளின் பத​வி​கள் காலி​யாக இருப்​ப​தை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​யி​ருக்​கி​றார்.​ காலி​யி​டங்​களை உட​னுக்​கு​டன் நிரப்​பு​வ​து​டன் சார்பு நீதி​மன்​றங்​
​ளின் எண்​ணிக்​கையை 35,000 அள​வுக்கு உயர்த்​து​வ​தும் அவ​சி​யம் என்று வலி​யு​றுத்​தி​யி​ருக்​கி​றார்.​

அடுத்​த​ப​ டி​யாக,​​ இந்​தி​யா​வில் வழக்​கா​டு​வ​தற்​கான செலவு மிக​வும் குறைவு என்​ப​தா​லும் வழக்​கு​க​ளின் எண்​ணிக்கை அதி​க​மாக இருக்​கி​றது என்று பேசி​யி​ருக்​கி​றார்.​ நீதி​மன்​றங்​கள் விதிக்​கும் கட்​ட​ணங்​க​ளும் படி​வங்​க​ளின் விலை​யும் வேண்​டு​மா​னால் அரசு நிர்​ண​யிப்​ப​தால் குறை​வாக இருக்​க​லாம்,​​ வழக்​க​றி​ஞர்​க​ளுக்​கான கட்​ட​ணம் அப்​ப​டியா என்​பதை அத்​து​றை​யில் உள்​ள​வர்​க​ளின் மன​சாட்​சியே பதில் கூறட்​டும் என்று விட்​டு​வி​டு​வோம்.​நீதி​மன்​றங்​க​ளில் ஏற்​ப​டும் தாம​த​மும்,​​ செல​வும்,​​ மக்​க​ளுக்கு விரக்​தியை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ எனவே கட்​டப்​பஞ்​சா​யத்து என்று அழைக்​கப்​ப​டும் மாற்று வழி​மு​றையை நாடு​கின்​ற​னர்.​
​நீதித் ​து​றை​யில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யா​ளர்​கள் தலை​யிட்டு நீதி​மன்​றங்​களை ஏற்​ப​டுத்​து​வ​தற்கு முன்​னால் நம் நாட்​டில் கிரா​மப் பஞ்​சா​யத்​து​களே நியா​யஸ்​த​லங்​க​ளா​க​வும் திகழ்ந்​தன.​ அப்​போது அவற்​றின் குறை​க​ளா​கப் பட்​டிய​லி​டப்​பட்ட பல விஷ​யங்​க​ளில் முக்​கி​ய​மா​னது,​​ அவை நடு​நி​லை​யா​னவை அல்ல என்​ப​தா​கும்.​பஞ் ​சா​யத்​தில் இடம் பெற்​ற​வர்​கள்,​​ கிடைக்​கும் சந்​தர்ப்ப சாட்​சி​யங்​க​ளின் அடிப்​ப​டை​யில்,​​ போதிய சட்ட அறிவு இல்​லா​மல்,​தங்​க​ளு​டைய செல்​வாக்​குக்கு பங்​கம் வராத வகை​யில் தீர்ப்பு வழங்​கி​னார்​கள் என்​ப​து​தான் அந்​தக் குற்​றச்​சாட்​டின் மையக் கருத்​தா​கும்.​ ​

ஆனால் வழக்​குத் தொடுக்​க​வும்,​​ விசா​ரிக்​க​வும்,​​ தீர்ப்பு வழங்​க​வும் அதி​கப் பொருள்,​​ நேரச் செலவு இல்​லா​மல் அந்​தப் பஞ்​சா​யத்​து​கள் நடந்து முடிந்​தன.​சட் ​டம் படித்த வழக்​க​றி​ஞர்​கள் வாதி,​​ பிர​தி​வா​தி​க​ளுக்​காக ஆஜ​ரா​கும் நீதித்​து​றையை நடு​நி​லை​யா​னது,​​ எவர் பக்​க​மும் சாயா​தது என்று பாராட்​டி​னா​லும் அது வழக்கை விசா​ரித்து தீர்ப்பு வழங்​கும் முக்​கி​ய​மான பணியை இழுத்​துக் கொண்டே போனால் அப்​ப​டிப்​பட்ட நீதித்​துறை யாருக்கு வேண்​டும் என்ற கேள்​வியே பெரி​தா​கி​றது.​

சட்​டப்​படி வழங்​கப்​ப​டும் தீர்ப்​பு​கள் தர்​மத்​துக்கு எதி​ரா​ன​வை​யாக இருக்​கும்​போது,​​ மக்​கள் ஆட்சி அமைப்​பின்​மீதே நம்​பிக்கை இழப்​ப​தும்,​​ தீவி​ர​வா​தி​க​ளாக மாறு​வ​தும் தவிர்க்க இய​லா​தவை.​அதிக நீதி​மன்​றங்​கள்,​​ அதிக நீதி​ப​தி​கள்,​​ அதிக வேலை நாள்​கள் போன்​றவை இந்த வழக்​கு​க​ளின் எண்​ணிக்​கை​யைக் கணி​ச​மா​கக் குறைக்​கும்.​

அதை​விட முக்​கி​யம் நீதி​ப​தி​கள்,​​ வழக்​க​றி​ஞர்​கள்,​​ நீதித்​துறை நிர்​வா​கி​கள் ஆகி​யோ​ரின் மனங்​க​ளில் ஏற்​பட வேண்​டிய முக்​கி​ய​மான மாற்​றங்​கள்.​இந்​தியா வறு​மை​யில் உழ​லும் கோடிக்​க​ணக்​கான ஏழை​க​ளைக் கொண்ட நாடு.​ இங்கு நீதி நிர்​வா​கத்​துக்கு அவர்​க​ளு​டைய வரிப்​ப​ணம்​தான் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ நேர​டி​யாக வழக்​குச் செல​வு​கள் குறைவு போலத் தோன்​றி​னா​லும் அந்த மானி​யமே வரிப்​ப​ணத்தி​லி​ருந்​து​தான் ஈடு​கட்​டப்​ப​டு​கி​றது.​

ஜூன் மாதப் புள்​ளி​வி​வ​ரப்​படி,​​ 1 கோடியே 94 லட்​சம் கிரி​மி​னல் வழக்​கு​க​ளும்,​​ 76 லட்​சம் சிவில் வழக்​கு​க​ளும் தீர்ப்​புக்​குக் காத்​தி​ருக்​கின்​றன.​ இந்த வழக்​கு​களை அடுத்த ஓராண்​டில் விசா​ரித்​துத் தீர்ப்பு வழங்க வேண்​டு​மா​னால்,​​ 1,500 உயர் நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும்,​​ 23,000 கீழமை நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளும் தேவை.​

நிர்​வா​க​மும் நியா​ய​மாக நடந்து கொள்​ள​வில்லை என்​ப​தால் பாதிக்​கப்​பட்ட குடி​மக்​கள் அர​சின்​மீது தொடுத்த வழக்​கு​க​ளும் ஏரா​ளம்,​​ ஏரா​ளம்.​ முறை​யா​க​வும்,​​ ​ நியா​ய​மா​க​வும்,​​ விரை​வா​க​வும் அர​சும் நிர்​வா​க​மும் செயல்​பட்​டால்,​​ பொது​மக்​கள் நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய அவ​சி​ய​மும் கணி​ச​மா​கக் குறைந்​து​வி​டும்.

​இந்​தி​யச் சிறைச்​சா​லை​க​ளில் சுமார் இரண்​டரை லட்​சம் பேர் விசா​ர​ணைக் கைதி​க​ளா​கத் தீர்ப்பை எதிர்​நோக்​கிக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவர்​க​ளது நிலை​மை​யைப் பற்றி யாரா​வது கவ​லைப்​ப​டு​கி​றார்​களா?​ அதில் எத்​தனை பேர் நிர​ப​ரா​தி​களோ,​​ யாருக்​குத் தெரி​யும்?​வழக்​கு​கள் தேங்​கிக் கிடக்​கின்​றன.​ நீதி தாம​தப்​ப​டு​கி​றது என்​றெல்​லாம் கருத்​த​ரங்​கம் போட்​டுப் பேசிக்​கொண்​டி​ருந்​தால் போதாது.​ செயல்​பட வேண்​டும். படுவார்களா...?

என்னை பொறுத்த வரையில் ஒரு நாட்டின் நீதி மன்றமும், சட்ட மன்றமும் சரியாக நியாயமாக நடைபெற்றால் அந்த நாடு வல்லரசாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

Wednesday, December 16, 2009

மக்கள் சக்தி கட்சி

உள்சுயாட்சி:

கட்சித் தலையீடு இல்லாத, சுய அதிகாரம், நிதி ஆதாரம் பெற்ற உள் சுய ஆட்சி.
கிராமப் பஞ்சாயத்தில் இருப்பது போல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

குறைவான, விரைவான அரசாங்கம்:

இலஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான, விரைவான அரசாங்கம்... அதே சமயம் குறைவான அரசாங்கம். மக்களின் தேவை, வசதி கருதி குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்கள் வருடம் முழுவது இயங்க வழிவகை செய்தல்.

பூரண மதுவிலக்கு:

அரசாங்கமே மதுவை ஊக்குவிப்பதால், இலட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பத்திலுள்ள பெண்கள்,குழந்தைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல்.

தனி ஈழமே தீர்வு:

மொழி, மத, இன வேற்றுமை கொண்ட சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆட்பட்டு அடிப்படை மனித உரிமைகளைக்கூட பெறமுடியாமலும், நிதமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமலும் தவித்து வரும் ஈழ மக்களுக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு:
மக்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார சமத்துவ நீதியை வழங்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு.

சாதிகளற்ற சமுதாயம்..
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சாதிகள் அற்ற சமுதாயம் அமையப் பாடுபடுதல்.

கூட்டுத் தலைமை :
மாநில அளவிலிருந்து கிராமக் கிளை வரை சுயநலம், பதவிப் போட்டிகளற்ற, ஜனநாயகத்தன்மை மிகுந்த கூட்டுத்தலைமை கொண்ட உள்கட்சி கட்டமைப்பு.

விரிவான கொள்கைக்கு
http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=54&Itemid=81


மேலும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி போட்டியிடுகிறது.

வேட்பாளர் : திரு எஸ். வாஷிங்டன்

சின்னம் : டி.வி.

மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக, தங்களது அன்றாட கணக்கு வழக்குகளை அவர்கள் தங்களது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

http://makkalsakthi.net/index.php?option=com_content&view=article&id=51&Itemid=85

அவர்களது முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்கள் சக்தி கட்சி - ஒரு சீரிய முயற்சி

மக்கள் சக்தி கட்சியானது, கடந்த 5 வருடங்களாக கிராமப்புற மேம்பாடு, தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு, தேசிய நதிநீர் இணைப்பை வலியுறுத்தி மக்கள் ஆதரவைத்திரட்டுதல், சுய முன்னேற்ற நூல்கள், பத்திரிகைகளை வெளியிட்டு இளைஞர்களை தன்னெழுச்சி கொள்ளச் செய்தல் போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வந்த இளைஞர்களால் 25.07.2009 அன்று ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. அதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...

கட்சியின் முக்கியக் கொள்கைகள்

இலாபகரமான விவசாயம்:

விவசாயத்தைப் பாதிக்கும் நிலவள மேம்பாடு, நீர்வளம், கட்டுபடியாகும் விலை, விதை, போதிய சந்தை வசதி, கடன்வசதி, அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு, பதப்படுத்துதல், காப்பீடு, இயற்கையோடிணைந்த விவசாய முறை... போன்ற அனைத்துக் காரணிகளையும் ஒரு சேர உயர்த்தும் விவசாயக் கொள்கை.

புதிய பொருளாதாரக் கொள்கை:

அறிவியல் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு புரட்சி யுகத்தின் காலத்திற்கேற்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு.

தரமான, கட்டணமில்லா - கட்டாயக் கல்வி:

ஏழை, பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கட்டாய கல்வி

கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசுமயம்..

இலாபமீட்டக்கூடிய தொழில்கள் தனியார் வசமிருப்பதுபோல் அத்தியாவசியத் தேவையுள்ள சேவைத்துறைகளான கல்வியும், மருத்துவமும் முழுமையாக அரசின் வசமாவதற்கு ஆதரவு.

மாநில சுயாட்சி:

ஒரு மாநில அரசு, மக்கள் நல அரசாக பரிபூரண சுதந்திரத்தோடும், நிதியாதாரத்தோடும் செயல்பட வழிவகுக்கும் அரசியல், பொருளாதார உரிமைகள் பெற்ற மாநில சுயாட்சி - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கும் அரசியல் பிரிவு 356ஐ நீக்குதல் - மாநில அரசின் நிர்வாகத் தலைமையாகவும், மாநிலத்தைக் கண்காணிக்கும் பதவியாகவும் உள்ள மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் பதவியை ஒழித்தல்.

மீதி அடுத்த பதிவில்.....

Tuesday, December 15, 2009

சொல்ல மனம் கூசுதில்லையே...

றுத்த எள்ளும்
நாட்டுச்சக்கரையும்
சேர்த்து இடித்துப் பிசைந்த
எள்ளு உருண்டை...

செடியோடு பிடுங்கி
ஓடுந்தண்ணீரில் அலசி
தணலில் வாட்டி பாதிபச்சையாகத்
தின்ற வேர்க்கடலை...

சுங்கும் கரும்போடு
இஞ்சி ஒருதுளியும்
எலுமிச்சம் பழமும் நசுக்கிக்
குடித்த கரும்புப் பால்...

தேன் எடுக்க தீ மூட்டி
மூச்சடைக்க முகம் மறைத்து
கூடு பிய்த்தெறிந்த கையின்
புறத்தில் நக்கிய தேன் துளி...

க்கத்துக் காட்டு வரப்போரம்
பதுங்கிப் போய் பறித்துவந்து
தீயில் வாட்டி உதடு சுடத் தின்ற
கருகிய சோளக்கருது...

காடு மேடெல்லாம் தேடி
கைவலிக்கப் பிடுங்கி வந்து
குமுட்டியடுப்பில் வேகவைத்து
தின்ற பனங்கிழங்கு...

இதில்...
எதிலும் பங்கு தராமல்
என் மகளிடம் சொல்கிறேன்
எதுவானாலும் உனக்காக
எப்போதும் செய்வேன் என...

---ஈரோடு கதிர்

Tuesday, December 8, 2009

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

க்களவையும் மாநிலங்கள் அவையும் அமளி துமளியால் ஒத்திவைக்கப்படுவது நமக்கெல்லாம் புதிதல்ல. ''மக்கள் வரிப் பணத்தை இப்படி கரியாக்குகிறார்களே..?'' என்று நாடே வயிறெரிந்து பார்ப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால், அண்மையில் மக்களவை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள், அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்ததற்குக் காரணமே வேறு!

பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
மிஸ் ஆன காங்கிரஸ் எம்.பி-க்களின் பெயர்ப் பட்டியலை வாங்கியிருக்கும் சோனியா காந்தி, அவர்கள் மீது நடவடிக்கைக்கான யோசனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

நாடாளுமன்றத்தை ஒரு மணி நேரம் நடத்த ரூ.14 லட்சம் வரை செலவாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். பண விரயம் ஒருபுறம் இருக்கட்டும், தங்களது பிரச்னையை எடுத்துரைத்துத் தீர்ப்பதற்கு வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வோர் உறுப்பினரையும் நாடாளுமன்றத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், கேள்வி நேரத்தில்கூட அவர்கள் ஆப்சென்ட் என்றால்..?

இப்படியொரு கேவலமான நிகழ்வு நிகழ்ந்திருப்பதே எத்தனை இந்தியனுக்கு தெரியும்.. ? ஆனால் வேட்டைக்காரன் வெளியீடு என்றைய தினம், சச்சின் டெஸ்டில் எத்தனை ரன்கள் என கேட்டால் யோசிக்காமல் வந்து விழும் பதில்கள். ஆக தப்பு எங்கிருக்கிறது..?

உயிர் காக்க உழவு காப்போம்

கொஞ்சமாவது யோசிங்கப்பு...

தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு

காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு

மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு

சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ

விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ

மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!

மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !

--உழவன்---

Saturday, December 5, 2009

கி.மு.கி.பி.


பிரபல cartoonist மதன் கைவண்ணத்தில் மற்றுமொரு ரசிக்கவைக்கும் படைப்பு. பூமியில் உயிரினங்கள் உருவாவதில் தொடங்கி, படிப்படியாக ஒவ்வொன்றாக விளக்குகிறார். முதல் 20-30 பக்கங்களில் மனிதன் புகுந்து விளையாடுகிறார். படிப்பவர் முகத்தில் புன்முறுவல் தெரிவது நிச்சயம். பல புதிய விஷயங்கள் புலப்படுகிறது.

மொத்தத்தில் வரலாற்று ரசிகர்களின் பொக்கிஷமான இந்த புத்தகம் ஒவ்வொருவரையும் ரசிக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உருப்பிடியான மற்றுமொரு புத்தகம்.

.

Friday, December 4, 2009

இடைவெளி

சரியாக ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, இதோ வந்து விட்டேன் மீண்டும் உங்கள் கவனத்தை கவர்வதற்கு. சின்ன தயக்கம், சரியான புறிதல் இல்லாதது, நேரமின்மை, அலுவலக சுமை, என்னத்த எழுதி என்னத்த செஞ்சி எனும் வாழ்க்கையின் மீது வெறுப்பு என அத்தனையும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டதனால் இந்த இடைவெளி தவிர்க்க முடியாததாகி போனது.

புது பொளிவுடன், புது தெளிவுடன், புது தெம்புடன் இனி வழக்கம் போல் எனது கோவம்,எதிர்பார்ப்பு,பாராட்டு,ஆற்றாமை என அத்தனையும் உங்கள் முன்னே...

ஒன்பத்துவேளியிளிருந்து ஒரு சாமானியன்.