Thursday, April 30, 2009

அழகு... உண்மை...

எனது வலைப்பூ வெறும் குறை,கோவம்,அறிவுரை என்பதையே பிரதானமாக கொண்டுள்ளதாகவும் , அதனால் கொஞ்சம் DRY யாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.

அதை போக்கும் விதத்தில் சில நடிகைகளின் புகைப்படத்தை இந்த பதிவில் தந்திருக்கிறேன்.(ஒரு கிளுகிளுப்பு இருந்தாதானே நல்லா இருக்கும்)ஆனால் அதுவும் உண்மையை தோல் உறுச்சிகாட்டும் விதமாகவே அமையும் என்பதில் முழு உத்திரவாதம் உண்டு.



'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ' திரிஷா...


பாலிவுட்டின் தபு...




'முன்னாள் உலக அழகி' சுஸ்மிதா சென்...







'புன்னகை இளவரசி' சினேஹா...





ராணி முக்கர்ஜி...



பிரியங்கா சோப்ரா...






நம்ம நயன்தாரா...






மனீஷா கொய்ராலா...






கத்ரீனா கைப்...






கரீனா கபூர்...





கஜோல்...


தீபிகா படுகோனே...


ஐயஷ்வர்யா ராய்...



என்ன புரியுதா,

கண்ணுக்கு தெரிந்தது மட்டும் அழகல்ல...


Thursday, April 23, 2009

ஈழம்


வணக்கம்

தமிழீழம் பற்றிய எனது நிலைபாட்டை வெளி உலகிற்கு தெரிவிற்கும் பதிவிது.
நான் பிறந்தது முதல் கேட்டு,கண்டு வரும் பிரச்சனைகளில் பிரதானமானது இது. என் ஊர் தஞ்சை மாவட்டம் என்பதாலும், சிறு வயது முதல் இலங்கை வானொலியை கேட்டு வந்ததாலும், ஈழம் பற்றிய தாக்கம் அதிகமாகவே இருந்தது.

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்ல பட்டுருக்கிறார்கள். அண்டை நாட்டின் பிரதம மந்திரி , உள்ளூர் அரசியல் தலைவர்கள் என நீண்டு கொண்டே இருக்கிறது சாவின் எண்ணிக்கை.
உண்மையில் என்ன தான் நடக்கிறது இலங்கையில்.

கடந்த பல ஆண்டுகளாக கிளிநொச்சியை தலைநகரமாகவும், முல்லைத்தீவை ராணுவ தலைமையிடமாகவும் கொண்டு, திரிகோணமலை, மாங்குளம், அக்கறைப்பட்டு, பூனகரை உள்ளிட்ட பல இடங்களில் தனி அரசாங்கம், தனி நீதிமன்றம்,தனி காவல் நிலையம் என்று தன்னாட்சி செய்து வரும் புலிகள் தான் ஆயுதம் ஏந்தி இலங்கை அரசாங்கத்துடன் போர் புரிந்து வருகின்றனர்.
இலங்கை அரசின் அறிக்கை படி 2002 இல் நாட்டின் வரைபடம் தமிழ் மக்கள் விகிதாசாரப்படி இதோ:

ஒரு பக்கம் புலிகளுடன் அரசு போர் நடத்தினால் மறு பக்கம் சர்வசாதாரணமாக கிரிக்கெட் நடக்கிறது. எங்கோ இருக்கும் நார்வே நாடு தூது குழு அனுப்பி சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது மிக அருகில் கூப்பிடும் தூரத்தில் இருந்துக்கொண்டு இறையாண்மை எனும் போர்வையில் அமைதி காத்துவருகிறது இந்தியா. அதுவும் புத்தர் பூமியில் நடந்து வரும் இந்த இனபடுகொலைகளை காந்தி பிறந்த அஹிம்சை தேசம் வேடிக்கை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது.

தனி ஈழம்,புலிகள் தீவிரவாத இயக்கம் என யோசிக்காமல் மனித உயிர்,மனித நேயம் என பாருங்கள். ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிருக்காக அக்னி பார்வை வீசிக்கொண்டிருக்கும் இந்தியா பல லட்சம் அப்பாவி உயிர்கள் பலி யாவதை சரி என்கிறதா? அதற்காக ராஜீவ் விவகாரத்தை நியாய படுத்தவில்லை, ராஜீவ் உயிரும் 10 மாத குழந்தையின் உயிரும் ஒன்று தான் என்பதே என் கருத்து. கொல்லப்படுவது யாராய் இருந்தால் என்ன ? மனித உயிர் . . . ?

பள்ளி வகுப்பறையில் படிக்க வேண்டிய 12 வயது சிறுவன், பதுங்கு குழிகளில் பயத்துடன் ஒளிந்து கொண்டிருக்கிறான். 10 மாத குழந்தையின் தாலாட்டே வானில் பறக்கும் விமான சத்தம் தான். சொந்த மண்ணிலேயே அகதிகளாக குடிபெயரும் இவர்களது உயிர்களுக்கு உத்திரவாதம் தர வேண்டிய அரசே எமனாக இருக்கிறது.

தமிழ்நாடு,தமிழீழம்,தமிழ் மக்கள்,தமிழ் உயிர் என அணுகாமல் மனித உயிர் என யோசித்து பாருங்கள். ஆனால் தமிழக அரசியல் வாதிகள் இந்த விஷயத்தை மிக கேவலமாக கையாளுகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. கடந்த இருபது ஆண்டுகளாக எத்தனை அறிக்கைகள், எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை பொதுகுழு தீர்மானங்கள், எத்தனை கண்டனங்கள் ,எத்தனை தந்திகள், எத்தனை கடிதங்கள்,எத்தனை ராஜினாமா அறிவுப்புகள், எத்தனை உர்வலங்கள், எத்தனை மனிதசங்கிளிகள், எத்தனை வேலை நிறுத்தங்கள் ?
விளைவு ?
சின்ன துரும்பை அசைக்க முடிந்ததா ?
ஒரு சின்ன உதாரணம் இலங்கையில் நடந்து வரும் இனபடுகொலைகளை தடுக்க இந்த அரசு அயராது பாடுபடும், தேவை பட்டால் பதவிகளை தூக்கி எறிய தயங்க மாட்டோம் என்று 1990 இல் தி.மு.க பொதுகுழுவில் போடப்பட்ட அதே தீர்மானம் வெறும் சொற்களை மட்டும் மாற்றி 2009 இல் மீண்டும் நிறைவேற்றி உள்ளார்கள்.தி.மு.க மட்டுமல்லாமல் அண்ணா.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்து அரசியல் கட்சிகளும் உண்மையான உணர்வோடு போராடுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விகுறி.

பிராணிகளை காக்க கூட BlueCross என சங்கம் வைத்து பாராட்டும் உலகம், மரங்களை அழிப்பதே குற்றம் என சட்டம் வைத்து போற்றும் உலகம், எப்படி இந்த GENOCIDE எனப்படும் இனப்படுகொலையை உள்வாங்கி கொள்கிறது என்பதே தெரியவில்லை.

வேலுப்பிள்ளை பிரபாகரனாகட்டும்,மஹிந்தா ராஜபக்சே ஆகட்டும் அனைவரும் மனிதர்களே.இருப்பதோ ஒரு உயிர்,ஒரு வாழ்கை. அனைவருக்கும் அமைதியாக வாழும் ஆசை எப்போதும் உண்டு. ஆனால்...
விதி விட்ட வழி...


தீர்வு...?

தமிழகத்தில் இருந்துகொண்டு மிக எளிதாக அறிக்கையோ,கண்டனங்களையோ தெரிவித்துவிடலாம். அல்லது இன்னும் சொகுசாக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு blog என்னும் பெயரில் கொடூரமான சாவையும் photo வாக போடலாம்.
ஆனால்... பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே. அவர்களுக்கு தான் தெரியும் எது சரி எது தவறு என்று.
அவர்கள் விருப்பப்படி என்ன இருந்தாலும் அதை செயல்முறை படுத்துவதே மிகச்சிறந்த தீர்வாகும். தனி ஈழம் விரும்ப பட்டால் இலங்கை பிரிவது தவிர்க்க முடியாத ஒன்று. அதை முன்னின்று செயல் முறை படுத்துவது உலக நாடுகளின் தலையாய கடமை.
அதே நேரம் போதுமான ஆதரவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் புலிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முயற்சியில் இலங்கை அரசிற்கு உலக நாடுகள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

பி.கு:
மனதை அறுக்கும் புகைப்படங்கள் பல மின்னஞ்சல் மூலமாகவும், வலைபூ மூலமாகவும் பார்த்து பார்த்து மரத்து போய் இருப்பதால்,அவற்றை இங்கு தவிர்த்திருக்கிறேன்.

Saturday, April 18, 2009

இன்றைய அரசியல்


மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக ( கடந்த இருமுறையாகப்) பணியாற்றிவரும் திரு நன்மாறன் அவர்களை எளிமையின் சின்னமாக – எவரும் பழகுதற்கு இனிய நண்பராக- ஏழை எளிய மக்கள் யாரும் எளிதில் தொடர்பு கொள்ளத்தக்க ஒரு மார்க்சிஸ்ட் தோழராக மட்டுமே வெளி உலகம் அறியும்.

அவர் ஒரு கவிஞர்.குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.சங்க இலக்கியங்களின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்டவர்.தமிழின் மீது தீராக்காதல் கொண்டவர்.

சிறுவர் முதல் பெரியவர் வரை எவரிடத்தும் மிகுந்த மரியாதையுடன் பழகுபவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர். எளிமையும் அடக்கமும் உள்ள மனிதர் இருக்க முடியுமா என்று ஒவ்வொரு முரையும் ஆச்சரியப்படுத்துபவராகவே இருக்கிறார். வறுமை பற்றி எந்தப் பிரஸ்தாபமோ வாழ்க்கையின் மீது புகாரோ ஏதுமில்லாத மனிதராக காற்றைப்போல காலத்தின் கரைகளைக் கடந்துகொண்டிருக்கும் மனிதர் அவர்.

நேற்று அவர்மீது கொலை முயற்சி நடந்துள்ளது மதுரையில். ஒரு பூப்போன்ற மனிதரைக்கூட ஆயுதம் கொண்டு தாக்கிட எந்த ரவுடிக்கும் மனம் வருமா ?

வரும் என்று மதுரையின் அஞ்சாநெஞ்சர்கள் நேற்று காட்டியிருக்கிறார்கள்.நாம் என்னாமாதிரியான ஓர் உலகத்தில் எப்படியான இறுகிய மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது நினைக்க மனம் பாதைக்கிறது.வரும் நம் தலை முறைக்கு இப்படியான உலகத்தைத்தான் நாம் விட்டுச்செல்லப்போகிறோமா?

மதுரையில் பச்சைக்குழந்தை மாதிரியான என் மகன் அழகிரியை மார்க்சிஸ்ட்டுகள் என்ன செய்யப்போகிறார்களோ என அஞ்சுகிறேன் என்று போன வாரம் டாக்டர் கலைஞர் தமிழினத்தலைவர் செம்மொழி கொண்டான் எழுதிய கடிதம் எதற்காக என்பது இப்போது செயல்விளக்கம் பெறத்துவங்கியுளது.

அப்போதே நான் நினைத்தேன் கருணாநிதி தன் பிள்ளைப்பாசத்துக்காக இதை எழுதவில்லை.தன் கட்சித்தொண்டர்களான ( லீலாவதியைப் பட்டப்பகலில் பெண் என்றும் பாராமல் படுகொலை செய்த ) தன் உடன்பிறப்புகளை உசுப்பிவிடத்தான் இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் என்று. அது நிசமாகிவிட்டது. அழகிரி வீட்டின் மீது அவர்களே நாலு கல் எறிந்துவிட்டு ஆ மார்க்சிஸ்ட்டுகள் வன்முறை என்றும் நாடகமாடுவார்கள் என்றும் இப்போது சந்தேகப்படுகிறேன். இவையெல்லாம்தான் பாசிஸ்ட்டு நடைமுறைகள்.

இந்திராகாந்தியும் பி.ராமமூர்த்தியும் ஒரே விமானத்தில் ஒருமுறை பறக்க நேரிட்டபோது இந்திரா கேட்டாராம் ‘ எப்ப பார்த்தாலும் என் பிள்ளை சஞ்சய் காந்தியை கரிச்சுக்கொட்டறீங்களே உங்ககிட்ட இருந்து என் பிள்ளையை எப்படிக் காப்பத்த்ரதுன்னே தெரியலியே ‘ என்று .அதற்கு ராமமூர்த்தி பதில் சொன்னாராம் ‘ உங்க கவலை அப்படி இருக்கு.என் கவலை இந்தப் பிள்ளையிடமிருந்து இந்தியாவை எப்படிக் காப்பாத்தறதுன்னு இருக்கு’

இன்று தோழர் ராமமூர்த்தி இல்லை.இருந்திருந்தால் இந்தப்பிள்ளையிடமிருந்து மதுரையையும் தமிழ்நாட்டையும் எப்படிக்காப்பாத்தறதுன்னு செம்மொழி கொண்டானிடம் நேரடியாகவே கேட்டிருப்பார். அதெல்லாம் உறைக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

Friday, April 17, 2009

யதார்த்தம்...

வழக்கமான புலம்பல்



ங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய
தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்

சந்தோஷம்தானா
சகோதரர்களே?

உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்...
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?


சரியான பதிலடி...



ல்லோரும்
வருமான மாமிசம் தின்கிறவர்களே..!
ஆனால், அதை மாலையாய்த் தோளில் போட்டு
தேசத்தை வீச்சச் செய்தது நீங்கள் மட்டுமே
ஜே.கே.ரித்தீஷூக்கே செலவழிக்கக் கற்றுத் தந்தவர்கள்
நீங்களாகவே இருக்கக்கூடும்.

தவறு கணினி மொழி கற்றதல்ல
நண்பனே...
'கசிந்த கண்' உடன்பிறப்புகளின்
'காய்ந்த வயிற்று' பெற்றோரின்
கசங்கல் நிமிர்த்தாத தன் முனைப்பே.

வாங்கிய வருமானத்தைக்கொண்டு
வாடகைகளை ஏற்றினீர்கள்.
ஒண்டுக்குடித்தனங்கள்
வாகனங்கள் குறைந்த
சாலைகளில் வாழ வந்தன.
மனை விலை உயர்த்தினீர்கள்
பிணம் வைத்து அழவும் வீடின்றி
நடுத்தரச் சுமை தாங்கிகளுக்கு
நாக்குத் தள்ளி நாடி குறைந்தது
'என்ன விலை அழகே'
உங்களின் விருப்பப் பாடலானபோது
'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'
எங்களுக்கே எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது.

கணினிகளைக் கையாண்ட கன்னிகளையே
கணினிகளாய்க் கையாண்டும்
அதை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் இறுமாந்த
கலாசாரக் காவலர்கள்
நீங்கள் அன்றி வேறு எவர்..?

வரி போகிறதே என்று உங்களுக்கும்
உயிர்போய் விடக் கூடாதே என்று
எங்களுக்கும் கவலைகள் மாறுபட்டன.

உங்களைப் பற்றி
சினிமா எடுத்தோம்
பத்திரிகைகளில் எழுதினோம்
நிஜம்தான்,
வளர்ச்சிகளே வாழ்த்தப்படும்
வீக்கங்கள் எப்போதும்
விமர்சிக்கத்தானே படும் நண்பனே..?
உதிர்ந்த பிட்டைக் கூட
இந்த சொக்கர்களுக்குத் தராத
நீங்கள் பற்றிச் சண்டை போடக் கூட
எங்களிடம் சட்டை இல்லையே
யாது செய்வோம் நண்பனே..?
போகட்டும் நண்பனே...
மன்னிக்கத் தெரிந்ததால் தமிழனாய் இருப்பவர்கள்
வீதிக்கு வந்த உங்களுக்காக
பழைய சோற்றிலும்
பச்சை மிளகாயிலும் பாதி தருவோம்.
பாவி நண்பா!
பர்கருக்கும் பீட்ஸாவுக்கும் எங்கே போவோம்?

பெற்றவர்கள் இருப்பதை
பெரும்பாலும் மறந்தவர்களே...
நினைவிருக்கட்டும்,
உங்களின் கணினி யுகத்தில்
முற்பகல் செய்யின் முற்பகலே விளையும்.
பிற்பகலிலாவது
உலகத்தின் மேல் பிரியமாயிருங்கள்!




நன்றி :செல்வேந்திரன்,பி.ஜி.கதிரவன்
கரு : விகடன்

Tuesday, April 7, 2009

விவசாயத்தின் எதிர்காலம்? பாகம் 3


விவசாய நீர்நிலைகளுக்கும் பேராபத்து:

முன்பு மாதக்கணக்கில் தொடர்மழை பெய்யுமாம். ஆனால் தற்போது நாள் கணக்கில் தான் மழை பெய்கிறது. முன்பை விட மழை அளவு குறைந்துள்ளது- முன்பை விட அதிகமாய் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது-. விவசாயிகளுக்குக் கிடைக்கும் விளைச்சல் பாதித்துப் பொருளிழப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்பட்டு வீணாகிறது.

ஏனெனில் நகர்ப்புறங்களிலுள்ள ஏரி, குளங்களில், 60 விழுக்காடு அளவு ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் ஆகிவிட்டன. இன்று குடிக்க குளிக்க எனத் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலை. பால் விலைக்கு ஈடாகத் தண்ணீர் விலை ஆகிவிட்டது. குடிநீருக்காகக் கால் கடுக்க நடக்கின்ற, காத்துக் கிடக்கின்ற மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்து நீர் எடுக்கின்ற நிலை ஒருபுறம்.


தேங்குவதற்கு வழியற்று எந்தப் பயனுமின்றி கடலோடு கலந்து தண்ணீர் காணாமல் போவது மறுபுறம். இதற்கு காரணம் நீர்நிலைகளைக் கைப்பற்றுபவர்கள் தான். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஆள் பலமும் அதிகார பலமும் எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்தவிடாமல் செய்து விடுகிறது-. வீட்டு வசதி வாரியமும் குளங்களையும் நீர் நிலைகளையும் அதிகாரப்பூர்வமான வீட்டுமனைகள் என்று அறிவித்து அதையும் பல இடங்களில் விற்பனை செய்தது தவறு மட்டுமல்லாமல் மாபெரும் குற்றமாகும்.


விவசாயிகளின் கல்லறைகளின் மீது எழுப்படும் மாடமாளிகைகள்:

இன்னொரு பக்கம் விவசாயிகள் கடன் தொல்லைகள் சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதங்களில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது.விவசாயிகளின் தற்கொலைகள் மூலம் வேளாண்மைத் தொழில் நெருக்கடியைக் குறித்த விழிப்புணர்வை நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. வட்டி தள்ளுபடி மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகாது.


விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார சமச்சீரின்மை தொடரும் மோசமான சூழலில், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இதைப் போக்காமல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, பணக்காரர்களின் பைகளை நிரப்பும் இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

விவசாயத்தின் எதிர்காலம்? பாகம் 2






சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு சேவை செய்யும்?உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தோம். இன்று உழுபவனுடைய நிலமெல்லாம் அன்னிய உள்நாட்டு பெரு முதலாளிகளின் பொருளாதார சாம்ராஜ்யங்களாக திகழ்கின்றன.


ஒரிசாவில் போஸிகே என்ற அன்னிய உருக்குக் கம்பெனி மகாநதி தீரத்தில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்க அனுமதித்தனர். அந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தனியாக துறைமுகம் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்திருக்கின்றனர். வெட்கக்கேடான இந்த வேதனையை எங்கே போய் சொல்ல?


சிறப்புப் பொருளாதார, மண்டலங்கள் துணை நகரங்களை உருவாக்குதல், சிறிய வியாபாரிகள் பாதிக்ககூடிய அளவில் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, நாடு முழுவதும் சங்கிலி தொடராக அந்த நிறுவனங்கள் வானத்தைத் தொடுகின்ற வகையில் வணிக வளாகங்களை அமைக்கவும் பன்னாட்டு நிறுவனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் லட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.நாட்டின் நலன் கருதி பொது மக்களின் தேவைக்காக முன்பு அவசர, அவசியமான நிலைகளில் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. இன்றைய மத்திய அரசு எதைப் பற்றியும் சிந்திக்காமல் 'எந்த நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க' என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்?


இம்மாதிரி மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களை கூவிக்கூவி அழைக்கின்றன. பிளாட்பாமில் விலையை கூவி விற்பதைப் போல ஆட்சியாளர்கள் வாவா என்று அழைத்து நாட்டின் முதுகெழும்பான விவசாயத்தைப் படிப்படியாக பாழாக்கி வருகின்றனர்.இந்திய மண் விவசாய மண். அந்த மண் வாசனையை உலக வங்கியிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைப்பது தாயை அடகு வைப்பதற்கு சமம். இந்தியாவின் முக்கியமான காரணிகளாக விவசாயமும் விவசாயிகளும் திகழ்கின்றனர்.
இன்றைக்கு அதற்கே சோதனை ஏற்பட்டதற்குக் காரணம் 1991லிருந்து மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் தான். இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும்


விவசாயிகளே உங்கள் நிலங்களை திமிங்கலங்களுக்கு கொடுத்துவிட்டு அவைகள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு. மண்டலாதிபதிகளே நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கித் தருகிறோம் ஆணையிடுங்கள் என்கிறது மத்திய அரசு, இதுதான். சிறப்புப் பொருளாதார மண்டலம்.


மேற்கு வங்கத்தை போன்று மும்பைக்கு வெகு அருகில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமையவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 35000 ஏக்கர்களுக்கு மேல் விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்குத் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போகம் விளையும் இவ்விளைநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் ஹேட்டாவேன் அணை கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வர கால்வாய் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
அரசும், அம்பானியும் இந்த நிலங்கள் தரிசு நிலங்கள் தான் என்று தலையில் அடித்து சத்தியம் செய்கின்றனர். மும்பைக்கு அருகில் உள்ள இப்பகுதியில் எல்லா வசதிகளோடும் ஒரு சாட்டிலைட் நகரம் அமைப்பது தான் ரிலையன்ஸின் திட்டம். அணைகள் கட்டுவதற்காக, மும்பை, புனே விரைவு வழிப் போக்குவரத்திற்காக என்று தங்களின் நிலத்தை இழந்த மஹாராஷ்டிர விவசாயிகள், எஞ்சிய நிலங்களையும் ஏய்த்துப் பறிக்கும் அரசின் போக்கை கண்டித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றன.


அடுத்த பாகத்தில் முடிவடையும்.

விவசாயத்தின் எதிர்காலம்? பாகம் 1


விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.


ஏன் இந்த அவல நிலை என்று பார்த்தால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் போன்ற பல காரணங்கள் நம் முன் தெரிகின்றன. விவசாய நிலங்களை அரசு எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்டங்கள் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.


ஆனால் மத்திய மாநில அரசுகள் ஏர் இந்தியா மகாராஜா சின்னத்தை போன்று கையைக் கட்டிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து உனக்கு என்ன தேவை? அதை செய்ய காத்திருக்கிறேன் என்ற நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவும், நம் நாட்டு விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நடந்து கொள்கின்றன.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:

விண்ணப்பம் பெறப்பட்ட 237 மண்டலங்களில் 148 வரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களாகும். புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவுகள், சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பத்தாண்டுகளுக்கு வரிச்சலுகை பெறலாம்.சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள் பறைசாற்றப்பட்டதிலிருந்து ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்பளிப்பு அளிக்கப்படும் என்று "கொள்கையளவில்" ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதானது. சட்டம் இயற்றப்படும் சமயத்தில் அரசு தெரிவித்த கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.


இதனால் பல ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும்.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தியதை நியாயப்படுத்துவதற்கு, மேலும் ஒரு காரணத்தைக் கூறி இருக்கிறது அரசு. சந்தை சக்திகள் அவற்றின் போக்கிற்கு ஏற்ப இயங்கிட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பது, ஒரு விதமான "உரிமை ராஜ்ஜியம்" உருவாவதற்கே வழிவகுக்கும்.


எனவே தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பு எதுவும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வர்த்தகத் துறை கருதுகிறது (தற்பொழுது இதில் மாற்றம் செய்ய அரசு எண்ணியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது) என்று அரசின் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தாக முடியும். சந்தை சக்திகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அளவினைத் தீர்மானிக்க அனுமதி அளித்தால் நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


தொடரும்...